search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl Molested"

    • டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.

    மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என கருதிய அவர், மகளுக்கு ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.

    அதனை மாணவி வாங்கி சாப்பிட்டார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. பின்னர் அந்த சிசுவை ஒரு சாக்கு பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் வேறு வழி இல்லாமல் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பணியாளர் செல்வி அகஸ்தியர் செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தானுக்கு தகவல் கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செந்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டின் பின்புறம் புதைத்த 7 மாத சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது கொடூர தந்தை, கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளை லாரி டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கி கருக்கலைப்பு செய்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

    மேலூர்:

    இச்சைக்கும், ஆசைக்கும் இணங்க வற்புறுத்தி எத்தனையோ இளம்பெண்கள், சிறுமிகளின் வாழ்வை தொலைத்து வீதியில் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறினாலும், தடுத்த பாடில்லை. அதிலும் சமீப காலமாக சிறுமிகள் அதிகம் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.

    சரியான வழிகாட்டுதல், புரிதலின்றி இனக்கவர்ச்சியாலும், நீயின்றி நான் இல்லை... என்று கூறும் பசப்பு வார்த்தைகளாலும் ஈர்க்கப்படும் பள்ளி பருவக்குழந்தைகளும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அப்படியொரு சம்பவம் மதுரை அருகேயும் நடந்துள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காசாளராக வேலைக்கு சேர்ந்தார். பெற்றோருக்கு அவரது வருவாய் உதவிகரமாக இருந்த நிலையில், மகளின் எதிர்கால திருமண தேவைக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

    இதற்கிடையே திருவாதவூரை அடுத்த வெள்ளமுத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், ஓட்டலுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது அவரது பார்வை 16 வயது சிறுமியின் மீது விழுந்தது.

    மெதுவாக பேச்சுக்கொடுத்து தன்பால் ஈர்த்த ராஜ்குமார், சிறுமியிடம் இந்த வேலை உனக்கு வேண்டாம், நான் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். அதனை நம்பிய சிறுமியும் ராஜ்குமார் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எண்ண தொடங்கினார்.

    சாவி கொடுத்த பொம்மையாக சிறுமியை மாற்றிய ராஜ்குமார் தனது காம இச்சைக்கு அவரை ஆளாக்க நினைத்து, வெள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக நாம் கணவன், மனைவியாகி விடுவோம் என்று கூறி கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளார்.

    பின்னர் கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது. பின்னர் ராஜ்குமார் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி சைல்டு லைன் உதவியை நாடினார்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறையினர் சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களின் வழிகாட்டுதல்படி, மேலூர் அனைத்து மகளிர் போலீசில் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கொடி மலர் ஆகியோர் விசாரணை நடத்தி ராஜ்குமார் மீது திருமண சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதபோல் ராணிப்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான மோகன்தாஸ் என்பவர் வேலூரில் ஒரு இனிப்பகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

    அவரிடம் ஏற்பட்ட மாற்றம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. மாஸ்டரின் மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை குறிவைத்து பாலியலுக்கு உட்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    • மயக்கம் அடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அவளை மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்ய வருமாறு அழைத்து சென்றார்.

    அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அந்த சிறுமியை கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரில் 3 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    இதையடுத்து மயக்கம் அடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
    • புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான்.

    சென்னை:

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும், எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் போது இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பிளஸ்-1 படித்து வந்த மாணவன், மாணவியை காதல் வலையில் வீழ்த்தினான். மாணவியை ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்வதை அவன் வழக்கமாக வைத்திருந்தான்.

    இந்த நிலையில் மாணவனின் நண்பர் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். பிளஸ்-2 படித்து வந்த போது அங்கு 2 முறை மாணவியை ஏமாற்றி அழைத்துச் செள்றுள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறையும், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறையும் மாணவன், மாணவியை அழைத்துச் சென்று அறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த வீட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்ற மாணவன் அங்கு வைத்து உல்லாசமாக இருந்துள்ளான்.

    இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல பிளஸ்-2 படிப்பையும் முடித்து விட்டு மாணவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான். இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவரது தாய் எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதித்தார். அப்போது பெண் டாக்டர் ஒருவர் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தான் பிளஸ்-2 படித்த மாணவன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதை கூறி கதறி அழுதார். இது பற்றி உடனடியாக கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.

    இதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    • சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார்.
    • போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபதி(வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். இதனையடுத்து சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    சிறுமியிடம் அவரது பாட்டி அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனால் சிறுமிக்கு அவரது பாட்டியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது.

    இதனையடுத்து சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார். பின்னர் 2 பேரும் செஞ்சேரிபுதூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர்.

    இந்தநிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பூபதி பொள்ளாச்சி ஜமீன் முத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானது. இதனையடுத்து பூபதி சிறுமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசவம் ஆக வாய்ப்பு உள்ளது என கூறினர். பின்னர் டாக்டர்கள் சிறுமியின் வயதை ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார்.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
    • தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கதோரண பெட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் இச்சிறுமியும் மகேந்திரமங்கலம் குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது.

    இதனால் சிறுமியை தருமபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.

    • ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    திருவனந்தபுரம்:

    மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டில் கட்டுமான பணி நடந்தபோது, அங்கு ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர் ராஜீவ்வுக்கு 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், குழந்தை மீது கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், ஒரு குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள், குழந்தையுடன் வெளிப்படையான பாலுறவு மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    • மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார்.
    • சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சூரிய நல்லூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 25). இவர் காங்கயத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்தார்.

    அவரது மனைவி 2-வதாக கர்ப்பம் தரித்த போது மனைவியை பார்ப்பதற்காக பழனிச்சாமி அடிக்கடி காங்கயம் வந்து சென்றார்.

    அப்போது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் பழனிசாமி ஈடுபட்டார்.

    சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் விசாரித்த போது, பழனிசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனிசாமி மீது காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    • மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
    • வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் கொரோத்தா (வயது 44). மாயாஜால கலைஞரான இவர் தனியாக பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

    அவரது மையத்திற்கு 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அந்த மையத்தில் சிறுமி சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது சிறுமியை மாயாஜால கலைஞர் ஜெயேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி அது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாயாஜால கலைஞர் மீது மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாயாஜால கலைஞர் ஜெயேஷை கைது செய்தனர்.

    மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.
    • சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி மண்டலத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் வாய்பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் மால்யாத்ரி (வயது 27). மாற்றுத்திறனாளி சிறுமியும் அவரது தாயும் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்களை வாங்க சென்றனர்.

    அப்போது மால்யாத்ரியும் அங்கு சென்றார்.

    சிறுமியின் தாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மால்யாத்ரி சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனது பைக்கில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

    இந்த நிலையில் மால்யாத்ரி சிறுமியை சந்தை அருகே விட்டுவிட்டு சென்றார்.

    சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

    அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து செய்கை மூலம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மால்யாத்ரியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியையும் அவரது சகோதரரையும் தட்டி எழுப்பினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கப்பேட்டை மாவட்டம், மீர் பேட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு 18 வயதில் அண்ணன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை அவரது தாயை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்

    இதனால் மனம் உடைந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமி மற்றும் அவரது சகோதரர் ஆதரவு இன்றி தவித்து வந்தனர்.

    சிறுமியின் சகோதரர் கூலி வேலைக்கு சென்று சிறுமியை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பெற்றோர்கள் குடியிருந்த வீட்டிற்கு வாடகை அதிகம் என்பதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீர்பேட்டை, நந்தவன பகுதியில் உள்ள சிறிய வீட்டிற்கு இருவரும் குடியேறினர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 8 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தனர்.

    வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியையும் அவரது சகோதரரையும் தட்டி எழுப்பினர்.

    அவர்கள் சிறுமியின் அண்ணனை தாக்கினர். தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரை வீட்டின் ஓரத்தில் அமர வைத்தனர். அண்ணன் எதிரிலேயே சிறுமியை 8 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். பின்னர் இது குறித்து யாரிடமாவது கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    சிறுமியை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    நேற்று காலை சிறுமியை அவரது சகோதரர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து டாக்டர்களிடம் தெரிவித்தார். டாக்டர்கள் ரச்சகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×