என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி
- சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார்.
- போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபதி(வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். இதனையடுத்து சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சிறுமியிடம் அவரது பாட்டி அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனால் சிறுமிக்கு அவரது பாட்டியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது.
இதனையடுத்து சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் பூபதியுடன் சென்றார். பின்னர் 2 பேரும் செஞ்சேரிபுதூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர்.
இந்தநிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பூபதி பொள்ளாச்சி ஜமீன் முத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.
கடந்த 20-ந்தேதி சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானது. இதனையடுத்து பூபதி சிறுமியை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசவம் ஆக வாய்ப்பு உள்ளது என கூறினர். பின்னர் டாக்டர்கள் சிறுமியின் வயதை ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்த பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்