search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர் கைது"

    • கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

    மேலூர்:

    இச்சைக்கும், ஆசைக்கும் இணங்க வற்புறுத்தி எத்தனையோ இளம்பெண்கள், சிறுமிகளின் வாழ்வை தொலைத்து வீதியில் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறினாலும், தடுத்த பாடில்லை. அதிலும் சமீப காலமாக சிறுமிகள் அதிகம் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ளது.

    சரியான வழிகாட்டுதல், புரிதலின்றி இனக்கவர்ச்சியாலும், நீயின்றி நான் இல்லை... என்று கூறும் பசப்பு வார்த்தைகளாலும் ஈர்க்கப்படும் பள்ளி பருவக்குழந்தைகளும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அப்படியொரு சம்பவம் மதுரை அருகேயும் நடந்துள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தம்பதியின் 16 வயது மகள், திருமோகூர் பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பை கடந்த ஆண்டு படித்து முடித்தார். மேற்படிப்பு படிக்க விரும்பியபோதும், குடும்ப வறுமையால் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதன்படி தனக்கு தெரிந்த நபரின் பரிந்துரைப்படி அங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காசாளராக வேலைக்கு சேர்ந்தார். பெற்றோருக்கு அவரது வருவாய் உதவிகரமாக இருந்த நிலையில், மகளின் எதிர்கால திருமண தேவைக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

    இதற்கிடையே திருவாதவூரை அடுத்த வெள்ளமுத்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், ஓட்டலுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது அவரது பார்வை 16 வயது சிறுமியின் மீது விழுந்தது.

    மெதுவாக பேச்சுக்கொடுத்து தன்பால் ஈர்த்த ராஜ்குமார், சிறுமியிடம் இந்த வேலை உனக்கு வேண்டாம், நான் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். அதனை நம்பிய சிறுமியும் ராஜ்குமார் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எண்ண தொடங்கினார்.

    சாவி கொடுத்த பொம்மையாக சிறுமியை மாற்றிய ராஜ்குமார் தனது காம இச்சைக்கு அவரை ஆளாக்க நினைத்து, வெள்ள முத்தப்பன்பட்டியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக நாம் கணவன், மனைவியாகி விடுவோம் என்று கூறி கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளார்.

    பின்னர் கடந்த 8 மாதமாக சிறுமி என்றும் பாராமல் பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாளுக்கு நாள் உடல் சோர்ந்த சிறுமியின் வயிறு பெரிதானது. பின்னர் ராஜ்குமார் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். ஆசை வார்த்தையால் வாழ்வை தொலைத்த சிறுமி சைல்டு லைன் உதவியை நாடினார்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சமூக நலத்துறையினர் சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களின் வழிகாட்டுதல்படி, மேலூர் அனைத்து மகளிர் போலீசில் இந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கொடி மலர் ஆகியோர் விசாரணை நடத்தி ராஜ்குமார் மீது திருமண சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து தலைமறைவான ராஜ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதபோல் ராணிப்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான மோகன்தாஸ் என்பவர் வேலூரில் ஒரு இனிப்பகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

    அவரிடம் ஏற்பட்ட மாற்றம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. மாஸ்டரின் மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை குறிவைத்து பாலியலுக்கு உட்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
    • பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    சங்ககிரி:

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு பிரியாவுக்கும், கணவர் ராஜதுரைக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது. இதில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிரியா, விக்னேஷ் பலத்த காயம் அடைந்தனர். இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா சின்னாக்கவுண்டா கிராமத்தை சேர்ந்த ஜெகன்பாபு (25) என்பதும், அவர் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியப்படுத்த பார்க்கிங் விளக்கு போடாமலும், கவன குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியதால் விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர்.

    கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    இதையடுத்து ஜெகன் பாபு மீது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்து நடக்கும் என்பதை தெரிந்தே வாகனத்தை நிறுத்துவது, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் வாகனத்தை எடுத்து செல்லுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து ஜெகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மொரப்பூர் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் அனுமதியின்றி வெள்ளி கற்களை கடத்தியது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சுந்தரபள்ளி சாலையில் அனுமதியின்றி கற்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மொரப்பூர் போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுந்தரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் அனுமதியின்றி வெள்ளி கற்களை கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த கர்த்தான்குளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது40) என்பவரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியையும், அதில் இருந்த 150 கற்களையும் பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சு கொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த கச்சனங்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவரை கைதுசெய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார்.
    • சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அப்போது மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்த தொல்லை அத்துமீறி போகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கருப்பையா கவுண்டர் வீதியை சேர்ந்த கன்னியப்பன் (31). ஆட்டோ டிரைவர். மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த விவகாரம் கன்னியப்பன் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியின் கன்னத்தில் அடித்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் 12-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கன்னியப்பன், அவரை தாக்கிய அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    ×