என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் அருகே மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ByMaalaimalar11 Sep 2023 6:58 AM GMT
- மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார்.
- சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
திருப்பூர்:
காஞ்சிபுரம் சூரிய நல்லூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 25). இவர் காங்கயத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்தார்.
அவரது மனைவி 2-வதாக கர்ப்பம் தரித்த போது மனைவியை பார்ப்பதற்காக பழனிச்சாமி அடிக்கடி காங்கயம் வந்து சென்றார்.
அப்போது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் பழனிசாமி ஈடுபட்டார்.
சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் விசாரித்த போது, பழனிசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனிசாமி மீது காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X