search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas"

    • பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பொதுகழிப்பறை, சட்டநாதர் கோவில் கீழவீதி, நகராட்சி குப்பை கிடங்கு, மற்றும் குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொது கழிப்பறை ஆய்வின்போது கழிவறையை சுகாதாரமாக பாதுகாத்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

    ஆய்வின் போது பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்பொழுது குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை எனவும், கோயில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் சிலர் குறைகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.

    மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மேலாளர் காதர் கான், உடன் இருந்தனர்.

    • எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான திருப்பூர் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் (அறை எண்.120) திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.

    இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், ராமேசுவரம். கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    • எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி நடைபெறும்.
    • கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா், எரிவாயு சேவை தொடா்பாக புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வந்தனர். ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் , எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து எரிவாயு தகனமேடை பணியை தொடக்க அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகரமன்ற தலைவர் குணசே கரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி முதன்மை பொறியாளர் சரவணன், வார்டு கவுன்சிலர்கள் தனபால், பாலசுந்தரம் மற்றும் பலர் பணியை மேற்கொண்டனர்.

    • சிவகங்கையில் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்-கலெக்டர் பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் மாளிகையில் எல்.பி.ஜி. வினியோகிஸ்தர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரையில் எரிவாயு பயன்பாடு என்பது கடந்த 2006-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டுகளில் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும்.எரிவாயு பயன்பாடு மற்றும் அதனை எளிதில் பெறு வதற்கான முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் இதுபோன்று விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்த ப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு வினியோகஸ்தர்களும் தங்களது பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதனை பொதுமக்களாகிய வாடிக்கையாளர்கள் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எரிவாயு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து எடுத்துரை ப்பதை கேட்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புக்களை வழங்கினார்.

    இதில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மண்டல துணை பொது மேலாளர் ரவிக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், கீதாகார்த்திகேயன், சண்முகராஜன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் மிருதுபாஷினி, சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டுக்குட்பட்ட திருநகர் மக்கள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், திருநகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவில் மின்சார கேபிள் கட் ஆகி உள்ளது.

    இதனால் அங்கு மின்கம்பங்களில் விளக்கு எரியவில்லை. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறி யிருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    51-வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி அளித்த மனுவில், மகிழ்ச்சி நகர் பகுதியில் மழை நீர் வடிகால் சேதமடைந்துள்ளது.அவற்றை சீரமைத்து தர வேண்டும். பொறியியல் கல்லூரி குடியிருப்பு பகுதியில் சேதம் அடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். ஜெயில் சிங்க் நகரில் உள்ள ஓடையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நமது நெல்லை இயக்கத்தினர் அளித்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம் என்.ஜி.ஓ.பி. காலனியில் எரிவாயு தகன மேடை அமைத்து தரவும், தகன மேடைக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    • ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுண்டமேட்டிலிருந்து முருகாம்பாளையம் வழியாக காதுகேளாதோர் பள்ளி வரை சாலையின் இடதுபுறமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தோண்டிய குழி சரிவர மூடப்படாத நிலையில் சாலையின் வலது புறமாக கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பணி முடியவில்லை. சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி சரியாக மூடப்படவில்லை. சாலையின் இருபக்கமும் குழி தோண்டியதால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கின்றார்கள். மேலும் இரவு நேரத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுகின்றன. எனவே ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    காவிரி டெல்டாவில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம் அமைத்துள்ளது.

    இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார் கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.

    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.


    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×