என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி
- சிவகங்கையில் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்-கலெக்டர் பங்கேற்றார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் மாளிகையில் எல்.பி.ஜி. வினியோகிஸ்தர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரையில் எரிவாயு பயன்பாடு என்பது கடந்த 2006-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டுகளில் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும்.எரிவாயு பயன்பாடு மற்றும் அதனை எளிதில் பெறு வதற்கான முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் இதுபோன்று விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்த ப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு வினியோகஸ்தர்களும் தங்களது பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதனை பொதுமக்களாகிய வாடிக்கையாளர்கள் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எரிவாயு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து எடுத்துரை ப்பதை கேட்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புக்களை வழங்கினார்.
இதில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மண்டல துணை பொது மேலாளர் ரவிக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், கீதாகார்த்திகேயன், சண்முகராஜன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் மிருதுபாஷினி, சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்