search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road damage"

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    • ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுண்டமேட்டிலிருந்து முருகாம்பாளையம் வழியாக காதுகேளாதோர் பள்ளி வரை சாலையின் இடதுபுறமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தோண்டிய குழி சரிவர மூடப்படாத நிலையில் சாலையின் வலது புறமாக கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பணி முடியவில்லை. சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி சரியாக மூடப்படவில்லை. சாலையின் இருபக்கமும் குழி தோண்டியதால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கின்றார்கள். மேலும் இரவு நேரத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுகின்றன. எனவே ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மோசமான சாலையால் அவதி அடைந்த மதுரவாயல் பொதுமக்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வானகரம் முதல் வாலாஜா வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது.

    இதை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தனியார் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப் பில் உள்ளது.

    சாலை விரிவாக்கத்தை காரணம் காட்டி இந்த சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன.

    இதன் காரணமாக இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பு களும் ஏற்படுகின்றன. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அந்த பகுதி மக்கள் அடிக்கடி புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் சாலையை சீரமைக்க முயற்சி எடுத்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் சாலை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

    அத்துடன் சாலையை சீரமைக்க முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகளும் பொதுமக்களை சமரசம் செய்தனர். வானகரம், வேலப்பன் சாவடி உள்ளிட்ட சந்திப்புகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பொய் வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் தமிழ் நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் வரதராஜன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    வானகரம் முதல் வாலாஜா வரை உள்ள 93 கிலோ மீட்டர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் ஒரு நாள் ரூ.60 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் வானகரம் சந்திப்பு, வேலப்பன்சாவடி சந்திப்பு, பூந்தமல்லி, பாரி வாக்கம் சந்திப்பு உள்ளிட்ட மூன்று சந்திப்புகளில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து மோசமாக உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்  24-ந்தேதி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மதுரவாயல் குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாங்களே ஜல்லி மணல் கொட்டி சாலையை சீரமைக்க முயன்ற போது எங்கள் மீது திருவேற்காடு போலீசார் கிரிமினல் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

    அப்போது ரூ.10 லட்சம் செலவில் மூன்று சந்திப்பு களிலும் உள்ள சாலையை மூன்று மாதங்களில் சீரமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாராயணா மற்றும் அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்று வரை சாலையை சீரமைக்க வில்லை. 

    இதேபோல் 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானகரம் காஞ்சீபுரம் சாலை 730 கோடி ரூபாய்க்கும் காஞ்சீபுரம் முதல் ராணிப்பேட்டை சாலை 780கோடி ரூபாய்க்கும் விரிவாக்கம் செய்ய ஓப்பந்தம் போடப்பட்டு இதுவரை எந்தவித பணிகளும் நடைபெற வில்லை.

    இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தினந்தோறும்  அதிகரித்து வருகிறது. எனவே வாக்குறுதி தவறி தங்களது கடமையை செய்ய தவறிய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய லாரி உரிமையாளர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் ஏற்கனவே திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி போலீசிலும் இதேபோல்  புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    உடன்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    உடன்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய குழு சார்பில் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்  உடன்குடி பகுதியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க கோரியும், நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க கோரியும், மணப்பாடு மீனவர்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி,  ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், உதவி செயலாளர்கள் கணபதி, முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், பாலன், பூங்காவனம் உட்பட பலர் பேசினர். 
    முடிவில் உடன்குடி ஒன்றிய பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.
    காரிமங்கலம் பகுதியில் குண்டும் - குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்து பைசுஅள்ளியில் இருந்து பூமாண்ட அள்ளி மோதூர் செல்லும் பிரதான சாலை பாலிடெக்னிக் கல்லூரி, பூமாண்டஅள்ளி, கோவிலூர், புலிக்கரை, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் சுமார் 3 கி.மீட்டர் தொலைவிற்கு ஜல்லி, கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 

    எனவே, பொதுமக்களின் நலன்கருதி பழுதடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொடைக்கானல் அருகே சேதமடைந்த பள்ளங்கி-கோம்பை சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் பள்ளங்கி- கோம்பை கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி வரை மட்டுமே அரசு பேருந்து செல்கின்றது. பள்ளங்கி முதல் கோம்பை சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு அரசு பேருந்தோ தனியார் பேருந்தோ இயங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பள்ளங்கி முதல் கோம்பை வரை 15 வருடங்களுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது வரை முறையான பராமரிப்பு வேலைகள் செய்யாததே காரணமாகும்.

    மேலும் கோம்பை பகுதியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் வாகன வசதி இல்லாததால் தங்களது உறவினர்கள் வீட்டிலோ அல்லது தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கூடங்களில் சேர்ந்தே படிக்கின்றனர்.

    மேலும் மருத்துவ அவசர உதவிக்கு 108 ஆம்புலன் சின் உதவியை நாடினால் தங்களது பகுதிக்கு செல்லும் சாலை சரியாக இல்லாதால் வரமுடியாது என்றும், சில சமயங்களில் அனுப்பி வைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில்லை.

    இதனால் விபத்துகளில் சிக்கி முதலுதவி குறித்த நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். மகப்பேறு காலங்களில் இவர்களது பாடு திண்டாட்டம். சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த கிராமத்திற்கு பெண் கொடுப்பதற்கு பெண் வீட்டார் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது . கடந்த வாரம் கனகு என்பவர் காய்கறி மூடையை தலைச்சுமையாக கொண்டு செல்லும்போது கரடு முரடான சாலையில் தவறி விழுந்து அதிக காயம் ஏற்பட்டதாலும், அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரமறுத்த தாலும் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    எனவே தொடர் விபத்துகளை சந்திக்கும் இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எல்லா இடங்களிலும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மழை பாதிப்புக்கு உண்டான பகுதிகளில் அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தொடர் மழையால் நாகர்கோவிலில் எல்லா பகுதியிலும் உள்ள சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாதையெல்லாம் மிகப்பெரிய குண்டும், குழியுமாகி விபத்துகள் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் உருவாகி உள்ளது. உதாரணத்துக்கு வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்லும் பஸ்கள் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் வழியாக சி.பி.எச். ரோடு, ஆறாட்டு ரோடு, எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்புக்கு வருகின்றன. இந்த சாலை அதிகளவில் குண்டும், குழியுமாக உள்ளது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக் கின்றன. இதேபோல் தெரிசனங்கோப்பு, வீர நாராயணமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சாலைகள், திருப்பதிசாரம் முதல் தாழக்குடி செல்லும் சாலை போன்றவை முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    இதேபோல் நாகர்கோவில் நகர பகுதியில் அனைத்து சாலைகளும, கடலோர பகுதிகளில் உள்ள சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குளங்கள் உடைந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். குமரி மாவட்ட கலெக்டர், நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர் வாகம், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து போர்க்கால அடிப்படையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    திருக்கனூர் அருகே குண்டும் குழியுமான சாலையை செப்பணிட கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே குமாரப்பாளையத்தில் இருந்து ஏரிக்கரை செல்லும் சாலையான மயிலம் பாதையில் சொட்டு நீலம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை மற்றும் 2 இரும்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சலைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஏரிக்கரை சாலையை அப்பகுதி விவசாயிகளும் பயன்படுத்துவதால் மழைக்காலங்களில் விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகும் நிலை வழக்கமாகி வருகிறது.

    எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை செப்பணிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் அருகே பல்லாங்குழியான சாலையை சீரமைக்ககோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வெள்ளோடு, யாகப்பன் பட்டி, கல்லுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை இணைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலை அமைக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விளை பொருட்களை கொண்டு வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் கிராம பகுதி மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    சாலை சீரமைப்பு பணி நடைபெறாததால் பல வருடங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.

    தற்போது சாலையின் பெரும் பகுதியில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டு பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நவல்பட்டு ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி நவல்பட்டு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்து உய்யகொண்டான் கரை வழியாக திருவெறும்பூர் வரை தினசரி வந்து செல்வதற்கு பயன்படுத்தி வரும் சாலை, மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

    இதையடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம்  கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கலெக்டர் ராசாமணியை சந்தித்து மனு கொடுத்தார். 

    அதில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக  கலெக்டருக்கு அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
    பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews

    ×