search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians suffering"

    திருக்கனூர் அருகே குண்டும் குழியுமான சாலையை செப்பணிட கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே குமாரப்பாளையத்தில் இருந்து ஏரிக்கரை செல்லும் சாலையான மயிலம் பாதையில் சொட்டு நீலம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை மற்றும் 2 இரும்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சலைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஏரிக்கரை சாலையை அப்பகுதி விவசாயிகளும் பயன்படுத்துவதால் மழைக்காலங்களில் விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகும் நிலை வழக்கமாகி வருகிறது.

    எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை செப்பணிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×