search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    திண்டுக்கல் அருகே பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    திண்டுக்கல் அருகே பல்லாங்குழியான சாலையை சீரமைக்ககோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வெள்ளோடு, யாகப்பன் பட்டி, கல்லுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை இணைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலை அமைக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விளை பொருட்களை கொண்டு வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் கிராம பகுதி மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    சாலை சீரமைப்பு பணி நடைபெறாததால் பல வருடங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.

    தற்போது சாலையின் பெரும் பகுதியில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டு பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×