search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja seized"

    • தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
    • கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ந்தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 3/4 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் தீவிர சோதனையில் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் கஞ்சா விற்பனை செய்ததாக 20 நபர்களும், குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 19 நபர்களையும், லாட்டரி விற்பனை செய்ததாக 10 நபர்களையும் என 49 பேர் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் சோதனையும் மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் படகு மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சுங்கதுறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி வெள்ளாற்றின் பாலத்தில் இன்று அதிகாலை சுங்கதுறை அதிகாரிகள் படகில் சென்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகபடும்படி நின்ற பைபர் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கஞ்சா மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 200 கிலோவாகும். மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக நாகை புஷ்பவனத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் மற்றும் அருளழகன், நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

    அதில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.

    • கடலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் புதுநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது கடலூர் எம்.புதூர் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • சுடுகாடு அருகே 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் தனி பிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது செங்கோட்டை காலாங்கரை சுடுகாடு அருகே 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் அவர்களை விரட்டிபிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செங்கோட்டை சங்கர பாண்டியன்.தெருவை சேர்ந்த பரமசிவன் (வயது 32), விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் (32) என்பது தெரிய வந்தது. அவர்கள் அந்த சுடுகாடு அருகே ரூ.3. லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாைள சிறையில் அடைத்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அமிர்தராயன் கோட்டை நாகராஜன் என்பவரது மகன் காசிராஜன் (வயது 21) என்பதும், இவர் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த 80 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா பொட்டலங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்."

    மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மஞ்சள், கடல் அட்டை போன்ற மருத்துவ பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினரும், உள்ளூர் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை மாநகர தனிப்பிரிவு போலீசார் பென்சிங், திருமணி, மாணிக்கராஜ் உள்ளிட்ட வர்கள் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்ற ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 25 கிலோ கஞ்சா கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் மதுரை ஜே.ஜே. நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (வயது29) என்பதும், மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் தூத்துக்குடி வடபாகம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டி எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்? யாரிடம் கொடுக்க சென்றார்? இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதாலும், பல்வேறு தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பணிபுரிவதாலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் இங்கு அதிகளவு கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அதிக அளவு உள்ளதாகவும், சில மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.

    இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    குமரி மாவட்டத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 5 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கஞ்சா கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். களியக்காவிளை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பைங்குளம் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), அஜிமல் (19), நிசாந்த் (21), ராமபிரகாஷ் (19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் குன்றுவிளை சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சாவுடன் நின்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாட்டப்பத்து பகுதியில் ஒரு பெண்ணும், 2 வாலிபர்களும் சந்தேகப்படும்படி பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை மறித்தனர். அப்போது 2 வாலிபர்களும் பைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

    போலீசார் அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபர்களுடன் வந்த ஆயிரப்பேரியை சேர்ந்த பார்வதி (வயது70). என்ற பெண்ணை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
    மதுரையில் கஞ்சா விற்றதாக 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்.

    அப்போது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கோபாலன் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது38), பைக்காரா மகாலிங்கம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.600 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஆனையூர் முருகன் (59) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.270 மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேதாரண்யம் பகுதியில் கடற்கரையில் ஒதுங்கிய 48 கிலோ கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், மற்றும் கஞ்சா ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும், இன்று வரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவது நடைபெற்று தான் வருகிறது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இன்று 13 மூட்டைகள் கரை ஒதுங்கி இருந்தன.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள், இதுபற்றி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 13 மூட்டைகளிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 26 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதேபோல் பெரிய குத்தகை கடற்கரையிலும் இன்று தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா 11 மூட்டைகள் இருந்தன. இதையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சர்வசேத சந்தையில் ரூ.2 லட்சம் ஆகும்.

    வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது மர்ம கும்பல் இதை விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி அதிகாரிகள் கஞ்சா கடத்திச்செல்பவர்களை கைது செய்தபோதும் இது தொடர்கதையாகி வருகிறது.

    அரசு பஸ், கூலித்தொழிலாளர்கள் மற்றும் கார் மூலம் மர்ம கும்பல் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் குமுளி சோதனைச்சாவடியில் சுங்கத்துறை அதிகாரி சுனிராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற காரை மறித்து சோதனையிட்டனர்.

    கார் இருக்கையின் அடியில் சுமார் 1½ கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த லியோதாஸ், கோகுல், சானவால், இருக்கான், நிகில் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பிடிபட்ட குமுளி சோதனைச்சாவடி அருகே தமிழகஎல்லையில் ஒரு சோதனைச்சாவடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட இங்கு கஞ்சா கடத்தும் கும்பல் பிடிபட்டது இல்லை. பெரும்பாலும் கேரள அதிகாரிகளே கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

    தமிழக அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளதால் தமிழக பகுதியில் இருந்து எளிதாக ரேசன்அரிசி மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

    ×