search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang"

    • தண்ணீர் பாட்டில் குளிர்ச்சியாக இல்லை எனக்கூறி பணம் தர மறுத்து வாக்குவாதம்
    • காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேரிடம் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (வயது 29). இவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த போது மது போதையில் 3 பேர் பேக்கரிக்கு வந்து சாப்பிட்டனர். பின்னர் தண்ணீர் பாட்டில் கேட்டு உள்ளனர். இதனையடுத்து சரண்குமார் அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த 3 பேரும் பிரிட்ஜ் இல்லையா, தண்ணீர் குளிர்ச்சியாகவே இல்லை. நீ எல்லாம் எதற்கு கடை வைத்து நடத்துகிறாய் என கூறி பணம் கொடுக்காமல் அங்கு இருந்து செல்ல முயன்றனர்.

    இதனையடுத்து சரண்குமார் அவர்களிடம் பணத்தை கேட்டார். அதற்கு இவர்கள் மில்டரிக்காரன் கிட்டேயே பணம் கேட்கிறாயா என 3 பேரும் சேர்ந்து சரண்குமாரை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேக்கரி கடை உரிமையாளரை மீட்டனர்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பேக்கரி கடை உரிமையாளர் சரண்குமாரை தாக்கியது காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்க்கும் குன்னூர் வெலிங்டனை சேர்ந்த நபர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தீவிர ஆலோசனை
    • வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட அளவில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    கோவையில் கலைஞர் மகளிர் உரிம தொகைக்காக 3 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, அங்கு 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 2,80,837 மனுக்கள் தொடர்பாக களஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

    ேகாவை மாநகராட்சியில் கடந்த 2 நிதியாண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு, எஸ்.எப்.சி, என்.எஸ்.எம்.டி ஆகிய திட்டங்கள் மூலம் ரூ.278.74 கோடி மதிப்பீட்டில் 3743 சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் 942 பணிகள் முடிந்து விட்டன.

    உக்கடம் ஆத்துப்பாலம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை மேம்பால நீட்டிப்பு பணிகள் நடக்கிறது.

    கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதல்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி செலவில் 11.80 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதுக்கரை முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை, தென்ச ங்கம்பாளையம், கிணத்துக்கடவு, வடசித்தூர், மதுக்கரை, செட்டிபாளையம், எஸ்.எஸ்.குளம், வெள்ளைமடை ஆகிய வட்டார பகுதிகளில் ரூ.1.58 கோடி செலவில் 317 வீடுகள் புனரமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத் தின்கீழ் கோவை மாவட் டத்தில் ஒட்டுமொத்தமாக 995 அரசு மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் 62, 209 மாணவர்கள் பலன்பெற்று வருகின்றனர். காலை உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோகிலா (பொது), கமலக்கண்ணன் (வளர்ச்சி), வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் துவராகநாத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர் பரப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.செயலாளர் வேலுமணி, துணை தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். இரும்பறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இங்கு விவசாயம் செய்வதால் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் என சிலர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். நாங்கள் வன விலங்குக ளுக்கு காவலாளிதானே தவிர தொல்லை கொடுப்பவர்கள் இல்லை என்பதை களத்தில் வந்து பார்த்தால் தெரியும்.

    மேலும் இந்த வழக்குகளால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாயம் பாதிக்கப்படுவதுடன் அதனை நம்பியுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகும்.

    இப்பகுதியில் விவசாயம் செய்தால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
    • ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை

    கள்ளக்குறிச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.

    அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
    • மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.

    காங்கயம்,

    நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.

    அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.

    எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    • நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

    சூலூர்,

    கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).

    இவர் தென்னம்பாளையத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் லோகநாதன், அருண், கார்த்திகேயன்.

    சம்பவத்தன்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    விக்னேஷ், லோகநாதன் ஒரு வாகனத்திலும், அருண் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தனர்.

    இவர்கள் தென்னம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓட்டல் அருகே வந்த போது, 3 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தனர். திடீரென அந்த கும்பல் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    அப்போது, விக்னேஷ் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த கும்பல் அவர்களை அரிவாளை காட்டி மிரட்டினர்.

    அப்போது திடீரென அதில் இருந்த ஒருவர் கார்த்திகேயனின் (25) கையை வெட்டினார். மேலும் மற்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதுடன், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து நண்பர்கள் காயம் அடைந்த கார்த்திகேயனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய விளம்பர பதாகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளில் மதுபான பாட்டில்கள் போட்டது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
    • 10 பவுன் மதிப்புள்ள 2 தாலி செயின்களை முகமூடி அணிந்து வந்த கும்பல் பறித்து சென்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி பாக்யா (33).

    இவர்கள் இருவரும் நாச்சியார்கோவிலில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தென்கரையில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.

    அப்போது புதுக்குடி என்கிற இடத்தில் 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் இந்த தம்பதி யினரை வழிமறித்துள்ளது.

    கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி பாக்யாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறித்ததுடன் அவரது கணவரிடம் இருந்துசெல்போ னையும் பறித்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாக னத்தையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இதனையடுத்து சிறிது தூரத்தில் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32) பானுமதி 26) என்கிற இருவரும் திருவாரூர் செல்வதற்காக புதுக்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களையும் இந்த முகமூடி கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பானுமதி கழுத்தில் இருந்த தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.

    மொத்தம் 10 பவுன் மதிப்புள்ள இரண்டு தாலிச் செயின்களை அடுத்தடுத்து இந்த முகமூடி கும்பல் பறித்து சென்றுள்ளது.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காட்சிகள் இருள் சூழ்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதே இடத்தில் வழிப்பறி பணத்தை அடித்து பறிப்பது போன்ற ஐந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இப்பகுதியில் இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமிராக்களை பொருத்தி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
    • பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    கோவை,

    கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. ஆனால் இந்த இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சி.எம். நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட கும்பல், சி.எம்.நகர் பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களிடம் இது எங்கள் இடம். இது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை பார்த்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், அங்கு வசித்து வரும் மற்ற குடியிருப்பு வாசிகளும் குவிந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் இருதரப்பினரையும் திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில் கட்டுமான பொருட்களையும் ஏற்றி வந்தனர்.

    பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள காலி இடத்தில் வைக்க முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களிடம் சென்று இங்கு வைக்க கூடாது என தெரிவித்தனர்.

    இதனால் அந்த கும்பல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானம் செய்தும், அந்த கும்பல் கேட்காமல் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் 2 தரப்பினரிடமும் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்கள் மீது கொண்டு வந்து மோதினார். இதில் சில பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளை இயக்கி கொண்டே இருந்தார்.

    இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். மேலும் மக்களிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதையடுத்து மக்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    போலீசாரின் முன்பே பெண்கள் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
    • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

    இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி நேற்றிரவு கொண்ட லாம்பட்டி சூளைமேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாக ஒரு கார் அங்கு நின்று கொண்டு இருந்ததை கவனித்த அவர் அருகில் சென்று விசாரித்தார்.

    அப்போது காருக்குள் 6 பேர் கும்பல் இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது கல்லூரிக்கு காவலாளி பணிக்கு செல்வதாக கூறினார்கள்.

    சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான கொடுவாள், கத்தி உட்பட ஆயுதங்கள் இருந்தது. அவர்கள் யாரையாவது கொலை செய்ய வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

    உடனே காரில் இருந்த 5 பேர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ேபாலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்? எதற்காக வந்தார்கள்? யாரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.
    • உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    திருப்பூர் : 

    விவசாய நிலங்கள் குத்தகை என்ற பெயரில் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திருப்பூர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- விவசாய நிலங்கள் குத்தகை மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று விவசாயிகளின் ஆசையைத் தூண்டும் விதமாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் யாரும் ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை.

    அந்த ஆடியோவில் பெண் ஒருவர் விவசாயி ஒருவரிடம் பேசும் அந்த ஆடியோவில் 10 ஏக்கர் பண்ணை நிலத்தில் விவசாயம் செய்ய இருப்பதாகவும், அதை தலா 22 சென்ட் என 40 பகுதிகளாகப் பிரித்து 22 சென்ட் நிலத்தை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வழங்குவதாகவும கூறுகிறார்.மேலும் அதில் நெல் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.அத்துடன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைத் தொகையை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரமாக திருப்பித் தருவதாகவும் உறுதி கூறுகிறார்.இன்றைய நிலையில் விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெறும் 30 சதவீத விளை பொருட்களைக் கொண்டு அந்த நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோலவே ஈமு கோழியின் முட்டையை ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கிக் கொள்கிறோம்.கறியை ஏற்றுமதி செய்கிறோம்.இறகுகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்று பல கவர்ச்சி விளம்பரங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் அபகரிக்கப்பட்டது.அதேநிலை இந்த விளம்பரத்தின் மூலமும் ஏற்படலாம்.எனவே இந்த திட்டத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்என்று விவசாயிகள் கூறினர்.

    ×