search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவரிசை"

    • ஜெயிலில் சக கைதிகளிடம் பழகி கொள்ளையனாக மாறிய வாலிபர்
    • 15 பவுன் நகையுடன் போலீசில் சிக்கினார்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் அன்னூர் ஏ.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் மைதீன்பாய் (வயது 40). இவர் கைகாட்டி பகுதியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் சிறுமுகை பூலுவம்பாளையம் பகுதியில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று தங்கினார். அடுத்த நாள் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த மைதீன் வீட்டு க்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து மைதீன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

    இதில் மர்மநபர் ஒருவர் மைதீன்பாய் வீட்டில் இருந்து நைசாக வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை, அன்னூர், காந்திபுரம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதன்ஒருபகுதியாக அன்னூர் நகர பகுதியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.

    எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்த தினேஸ்குமார் (வயது 30) என்பதும், மைதீன்பாய் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது:-

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை சேர்ந்த தினேஸ்குமார் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் 3 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்காக அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    அங்கு தினேஸ்குமாருக்கு கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் சக கைதிகளிடம் கொள்ளை அடிப்பது எப்படி, போலீசாருக்கு கண்ணாமூச்சி காட்டிவிட்டு தப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை அறிந்துகொண்டார்.

    தொடர்ந்து அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சொந்த ஊரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை.

    எனவே தினேஸ்குமார் வேலைதேடி கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் அன்னூரில் வீடு எடுத்து தங்கினார். பின்னர் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு அன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டார். தொடர்ந்து அவர் மைதீன்பாய் வீட்டில் முன்கதவு பூட்டை உடைத்து கொள்ளை அடித்து தப்பியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 15 சவரன் நகைள் மீட்கப்பட்டன.

    இதையடுத்து மைதீன்பாய் வீட்டில் கொள்ைள அடித்ததாக தினேஸ்குமாரை அன்னூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.அன்னூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் 10 நாட்களுக்கு பின் மீண்டும் திருட வந்தபோது போலீசார் வாகன சோதனையில் சிக்கி ஜெயிலுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மூதாட்டி, வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது
    • யோனேஷ்உசேனும், மொகல்ஜாபரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்

    கோவை,

    கோவை சூலூர் ஜெர்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 74). இவர் சம்பவத்தன்று காலை வீட்டுவாசலை பெருக்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஈஸ்வரியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல்வேகத்தில் தப்பிசென்றனர்.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் மூதாட்டி ஈஸ்வரியிடம் செயின் பறித்த 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் செட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கவுசிக் என்பவரிடமும் 2 பவுன் சங்கிலியை பறித்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சூலூர் அடுத்த கலங்கல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த யோனேஷ்உசேன் (22), ஆந்திராவை சேர்ந்த மொகல்ஜாபர் (21) என்பது தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை யில் அவர்கள் பற்றிய மேலும் திடுக்கிடும் தகவ ல்கள் வெளியாகி உள்ளன.

    யோனேஷ்உசேன், மொகல்ஜாபர் ஆகிய 2 பேரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யோனேஷ்உசேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி யில் குடியேறி வசித்து வந்து உள்ளார்.

    அப்போது அவருக்கு வழிப்பறியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. அதன்படி இவர் ஆந்திராவில் வசித்த மொகல்ஜாபரை கூட்டு சேர்த்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு பெருந்துறை, சேலம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளனர்.

    வாரம் ஒரு மாவட்டம் என்ற ரீதியில் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளது. எனவே அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கோவையில் வழிப்பறி செய்துவிட்டு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.

    இந்த நிலையில் தான் அவர்களை சூலூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் ஈஸ்வரி, செட்டிப்பாளையம் கவுசிக் ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தாக யோனேஷ்உ சேன், மொகல்ஜாபரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலி, வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
    • ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை

    கள்ளக்குறிச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.

    அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்
    • கடலூர் ,சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை


    அரியலூர்,

    அரியலூர் ராஜாஜி நகர், ஆர்.கே.காலனித் தெருவைச் சேர்ந்த பொன்சேகர் மனைவி பொன்ராணி என்பவர் கடந்த 18 ஆம் தேதி பிற்பகல் ஓ. கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு ஸ்கூட்டரில் சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து அவர் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் தலைமையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜவேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை அவர்கள் அம்மாக்குளம் பிரிவுப் பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும் வகையில் நம்பர் பிளேட் பாதி அழிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலை, ஏரிக்கரையைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ்(22), அதே பகுதி சமத்துவப் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(19) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த 18 ஆம தேதி பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து இவர்கள் கடலூர் மாவட்டத்தில் இரண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, சேலத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.




    • ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
    • 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் விசாரித்து விடுவித்த நிலையில் ‘திடீர்’ மாயம்
    • நாகரில் பணிக்கு சேர்ந்த 4-வது நாளிலேேய கைவரிசை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் அந்த கடையில் இருந்த ரூ.42 ஆயிரத்தை காணவில்லை.

    இதையடுத்து கடை உரிமையாளர் பணத்தை தேடினார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடையில் வேலை பார்த்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இளம் பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய பணத்தில் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கிய தாகவும், மீதி பணத்தை பேக்கில் வைத்து இருப்பதாக வும் கூறினார்.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்த னர். அவரது பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். நடந்த சம்பவத்தை போலீசார் இளம்பெண்ணின் பெற்றோரிடம் கூறினார்கள். இளம்பெண்ணிடம் இருந்த பணத்தை கடை உரிமையா ளரிடம் போலீசார் வாங்கி ஒப்படைத்தனர். மீதி பணத்தை ஒப்படைக்க சிறிது கால அவகாசம் கேட்டனர்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற அந்த இளம்பெண் அழுது கொண்டே இருந்தார். பின்னர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். வீட்டில் இருந்தவர்கள் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடினார்கள். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் கோட்டார் போலீசில் மகள் மாயமானது குறித்து புகார் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கடையில் திருடிய விஷயம் வெளி நபர்களுக்கு தெரிந்ததால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் இதனால் வீட்டில் இருந்து அவர் சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.

    மாயமான இளம் பெண்ணின் செல்போன் டவர் உதவியுடன் அவரை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மதுரையில் கைவரிசை காட்டி ஏமாற்ற முயன்ற ஆந்திர வாலிபர் கைதானார்.
    • போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல 5ஸ்டார் ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு 30 வயதுடைய நபர் டிப்டாப் உடையணிந்து வந்தார். அவர் தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்தி கொண்டதோடு தனக்கு ஆடம்பரமான அறை வாடகைக்கு வேணடும் என கூறியுள்ளார்.

    அதன்படி ஓட்டல் நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய அறையை அந்த நபருக்கு ஒதுக்கியது. கடந்த சில நாட்கள் ஓட்டலில் தங்கிய அந்த வாலிபர் உணவு, மது என ஏக போக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். ஓட்டல் அறையை விட்டு வெளியேறும் போது பில் தொகையை செலுத்துவதாகவும் ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த நபர் சம்பவத்தன்று இரவு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த தப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது நுழைய வாயிலில் இருந்த ஓட்டல் காவலாளி கையும் களவுமாக பிடித்தார். அவரிடம் ஓட்டலில் தங்கியதற்கான பணத்தை கேட்டபோது இல்லை என கூறியதோடு மோசடி பேர்வழி என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த பரோடா சுதிர் என தெரியவந்தது. இவர் வேலைக்கு செல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பியுள்ளார்.

    இதற்காக ரெயில்களில் பயணம் செய்யும் இவர் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, 3 ஸ்டார், 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்கி ஏக போக வசதியை அனுபவித்து அதற்கான தொகை செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பரோடா சுதிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் அரசு பஸ்சில் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாசி வீதி நாகுபிள்ளை தோப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது57). இவர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் காளியம்மாளின் மணிபர்சை திருட முயன்றார். உடனே சுதாரித்த அவர் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அவர் திருச்சி ரெயில்வே ஸ்டேசன் கேட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராதேவி(50) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டார்.
    • கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த ார். அப்போது அவருடன் சென்ற பேத்தியை காண வில்லை.

    தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்ம நபர் வளை யலை திருடி சென்றுள்ளார்.

    இதுகுறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜவுளி கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதனடிப்படையில் அந்த முதியவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மதுரை தாசில்தார் நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதில், அவர் வேறு சில ஜவுளிக்கடைகளிலும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63). இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தா வணியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் செயின் காணாமல் போனது.

    இதுகுறித்து துரைசாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையிடம் திருடினார்களா? அல்லது மாயமானதா? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • பழனியம்மாள் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38)இவரது மனைவி ஜீவா (வயது 32). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் ஜீவா வீட்டின் கதவை உடைத்து ஜீவா வை கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 7பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    பின்னர் அதே தெருவில் வசிக்கும் பழனியம்மாள் (வயது 65) வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். எராவூர் அருகில் உள்ள மேலூர் பஸ் நிறுத்தம் அருகே தனியாக வசிக்கும் பூபதி (வயது 60) வீட்டில் நேற்று நள்ளிரவில் 2 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். வீடடில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் பூபதியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கடலூர்:

    வடலூர் அருகே ஆபத்தானபுரத்தைச் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். காலையில் எழுந்து ரூமிலிருந்து வெளியில் வர கதவைத் திறந்தார். கதவை திறக்க முடியவில்லை. இதனால் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை திறந்து ஆறுமுகம் குடும்பாத்தாரை பொது மக்கள் வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் வந்த ஆறுமுகம், வீட்டிலிருந்த மற்றொரு ரூமுக்கு சென்றார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.    இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வெளிப்புற கதவை பூட்டாததால் உள்ளே வந்த கொள்ளையர்கள், ரூமில் படுத்திருந்தவர்கள் வெளியில் வராமல் இருக்க கதவை பூட்டி விட்டனர். பின்னர் மற்றொரு ரூமிற்கு சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வடலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.

    இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீட்டின் சாவியை கதவின் மீது வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கோவி லுக்கு சென்று விட்டு பொன்னம்மாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொன்னம்மாள் கோவிலில் இருந்து திரும்பி வந்த போது அவரது வீடு பூட்டி தான் இருந்திருக்கிறது. ஆகவே அவர் கோவிலுக்கு சென்ற போது வீட்டு சாவியை கதவின் மேலே வைப்பதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் தான், அவரது வீட்டில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் பொன்னம்மாளின் உறவினர்கள் உள்ளிட்டோ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×