search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manual"

    • செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது
    • கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்தி றனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு 2023 தகவல் வெளியீடு குறித்து கையேடுகள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாற்று த்திறனாளிகள் நலத்து றை, உரிமைகள் திட்ட த்தின் கீழ் மாற்றுத் திறனாளி களுக்கான கணக்கெடுப்பை செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறினார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
    • 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு நித்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    அதேபோல் வீடுகளில் சமையல் அறை, குளியல் அறைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கழிவுநீரை சுத்திகரித்து உறிஞ்சிக்குழிகள் மூலம் கழிவுநீர் மேலாண்மை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.

    இத்திட்டத்திற்கு மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார்.

    ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட இணை இயக்குனர் முருகண்ணன், செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கழிவுநீரை மேலாண்மை செய்வதற்கு உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    வீடுகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைக்கும் முறைகள் குறித்து கொத்தனார்களுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் உறிஞ்சிக்குழி அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகளையும் கொத்தனார்களுக்கு வழங்கினர்.

    இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து கொத்தனார்கள் கலந்துகொண்டு மயிலாடுதுறையில் ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மைக்கான உறிஞ்சிக்குழிகள் அமைப்பது குறித்து கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், அர்ஜுனன், மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×