search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணக்கெடுப்பின் போது மாற்றுத் திறனாளிகள் முழு  தகவல்களை தெரிவிக்க வேண்டும்: கடலூர் கலெக்டர் வேண்டுகோள்
    X

    பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்ட காட்சி.

    கணக்கெடுப்பின் போது மாற்றுத் திறனாளிகள் முழு தகவல்களை தெரிவிக்க வேண்டும்: கடலூர் கலெக்டர் வேண்டுகோள்

    • செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது
    • கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்தி றனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு 2023 தகவல் வெளியீடு குறித்து கையேடுகள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பயிற்சி மற்றும் தகவல் கையேடுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாற்று த்திறனாளிகள் நலத்து றை, உரிமைகள் திட்ட த்தின் கீழ் மாற்றுத் திறனாளி களுக்கான கணக்கெடுப்பை செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறினார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×