search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handcuffs"

    • பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டார்.
    • கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த ார். அப்போது அவருடன் சென்ற பேத்தியை காண வில்லை.

    தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்ம நபர் வளை யலை திருடி சென்றுள்ளார்.

    இதுகுறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜவுளி கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதனடிப்படையில் அந்த முதியவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மதுரை தாசில்தார் நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதில், அவர் வேறு சில ஜவுளிக்கடைகளிலும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63). இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தா வணியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் செயின் காணாமல் போனது.

    இதுகுறித்து துரைசாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையிடம் திருடினார்களா? அல்லது மாயமானதா? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.

    விழுப்புரம்:

    தூத்துக்குடி மாவட்ட த்தை சேர்ந்தவர் மேரி (வயது 30) இவர் சென்னை கே.கே. நகரில் தங்கி அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மேரி தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது திண்டிவனம் அருகே சலவாதி பகுதியில் பஸ் வந்தபோது இரவு சாப்பிடுவதற்காக பஸ்சை சலவாதியில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பஸ் டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டலுக்கு சென்ற போது கடைசியாக மேரி இறங்கினார். திடீரென்று ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களில் 2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.இதைப் பார்த்த மேரி அதிர்ச்சி அைடந்து திருடன் திருடன் என கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 பேரில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்றொருவன் மேரியை தாக்கி விட்டு தப்பிஓட முயன்ற போது பொதுமக்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த திண்டி வனம்போலீஸ் ஏ.எஸ்பி.அபிஷேக்குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள்மத்திய பிரதே சம்மனவர் தாலுகா கர்வா பகுதியை சேர்ந்த விவேர்கான் (வயது 29) இவனது கூட்டாளி களும் அதே பகுதியை சேர்ந்த வர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தப்பியோடிய 4 மற்றும் இவர்கள் வேறுஎங்கேயாவது கொலை, கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்துபோலீசார் கிடுக்கிப்பிடிவிசாரணை செய்துள்ளனர்.

    ×