என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர்பரப்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர்பரப்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

    • கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர் பரப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.செயலாளர் வேலுமணி, துணை தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். இரும்பறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    இங்கு விவசாயம் செய்வதால் வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் என சிலர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். நாங்கள் வன விலங்குக ளுக்கு காவலாளிதானே தவிர தொல்லை கொடுப்பவர்கள் இல்லை என்பதை களத்தில் வந்து பார்த்தால் தெரியும்.

    மேலும் இந்த வழக்குகளால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாயம் பாதிக்கப்படுவதுடன் அதனை நம்பியுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகும்.

    இப்பகுதியில் விவசாயம் செய்தால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள் 200-க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×