என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gaja cyclone damage
நீங்கள் தேடியது "gaja cyclone damage"
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தத்து எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆலோசனை வழங்கியுள்ளார். #GajaCylone #Congress #Elangovan
சென்னை:
கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை பகுதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 8 கிராமங்களை நேரில் சென்று பார்த்தேன். விமானத்தில் குண்டு வீசி அழிக்கப்பட்டது போல் அழிந்துகிடக்கிறது.
உட்புற கிராமங்களுக்கு இன்னும் யாரும் செல்லவில்லை. மின்சார வசதி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மெயின் ரோடுகள் வழியாக செல்கிறார்கள். கிராமங்களுக்குள் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். எங்களையும் சில இடங்களில் வழிமறித்தார்கள். அவர்களிடம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.
மிகப்பெரிய துயரில் மக்கள் சிக்கி கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக மீட்க வேண்டியது அவசியம்.
மத்திய குழு வருகை, நிவாரணம் வழங்குதல் ஒரு புறம் நடக்கட்டும். அமைச்சர்கள் எல்லோரும் வசதியாகத்தானே இருக்கிறார்கள். ஒவ்வொரு யூனியனையும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தத்தெடுங்கள். அங்கேயே போய் முகாமிடுங்கள். நிவாரண பணிகளை செய்யுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் எப்படி தெரு தெருவாக முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை செய்கிறார்கள். அதே போல் இந்த பணியையும் மேற்கொண்டால் மக்களை விரைவாகமீட்டு விடலாம்.
முக்கியமாக ஒரு விஷயத்தை பார்த்தேன். காமராஜர், கருணாநிதி காலத்தில் நடப்பட்ட பல மின்கம்பங்கள் தாக்கு பிடித்துள்ளன.
ஆனால் ஜெயலலிதா காலத்து மின்கம்பங்கள்தான் பெருமளவு உடைந்து விழுந்துள்ளது. அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு அமைத்து இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட 8 கிராமங்களில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இளங்கோவன் வழங்கினார்.
இதில் காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ஜே ராமச்சந்திரன், நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், நாசே ஆர்.ராஜேஷ், கே. மகேந்திரன், ஜெரோம் ஆரோக்கியராஜ், ராஜதம்பி, வைரக்கன்னு, ஏ.ஜி.சிதம்பரம், திருச்சி வேலுசாமி, மற்றும் பலர் உடன் சென்றனர்.
மேலும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு, சேண்டாக் கோட்டை, குடிசை வீடு இடிந்து நான்கு பேர் உயிரிழந்த சிவக்கொல்லை கிராமங்களில் ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார். #GajaCylone #Congress #Elangovan
கஜா புயல் பாதித்த பட்டுக்கோட்டை பகுதியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் 8 கிராமங்களை நேரில் சென்று பார்த்தேன். விமானத்தில் குண்டு வீசி அழிக்கப்பட்டது போல் அழிந்துகிடக்கிறது.
உட்புற கிராமங்களுக்கு இன்னும் யாரும் செல்லவில்லை. மின்சார வசதி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மெயின் ரோடுகள் வழியாக செல்கிறார்கள். கிராமங்களுக்குள் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள். எங்களையும் சில இடங்களில் வழிமறித்தார்கள். அவர்களிடம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் என்று சொன்ன பிறகுதான் விட்டார்கள்.
மிகப்பெரிய துயரில் மக்கள் சிக்கி கிடக்கிறார்கள். அவர்களை உடனடியாக மீட்க வேண்டியது அவசியம்.
மத்திய குழு வருகை, நிவாரணம் வழங்குதல் ஒரு புறம் நடக்கட்டும். அமைச்சர்கள் எல்லோரும் வசதியாகத்தானே இருக்கிறார்கள். ஒவ்வொரு யூனியனையும் ஒன்றிரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தத்தெடுங்கள். அங்கேயே போய் முகாமிடுங்கள். நிவாரண பணிகளை செய்யுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் எப்படி தெரு தெருவாக முகாமிட்டு முழு வீச்சில் பணிகளை செய்கிறார்கள். அதே போல் இந்த பணியையும் மேற்கொண்டால் மக்களை விரைவாகமீட்டு விடலாம்.
முக்கியமாக ஒரு விஷயத்தை பார்த்தேன். காமராஜர், கருணாநிதி காலத்தில் நடப்பட்ட பல மின்கம்பங்கள் தாக்கு பிடித்துள்ளன.
ஆனால் ஜெயலலிதா காலத்து மின்கம்பங்கள்தான் பெருமளவு உடைந்து விழுந்துள்ளது. அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு அமைத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ஜே ராமச்சந்திரன், நிர்வாகிகள் வி.ஆர்.சிவராமன், நாசே ஆர்.ராஜேஷ், கே. மகேந்திரன், ஜெரோம் ஆரோக்கியராஜ், ராஜதம்பி, வைரக்கன்னு, ஏ.ஜி.சிதம்பரம், திருச்சி வேலுசாமி, மற்றும் பலர் உடன் சென்றனர்.
மேலும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு, சேண்டாக் கோட்டை, குடிசை வீடு இடிந்து நான்கு பேர் உயிரிழந்த சிவக்கொல்லை கிராமங்களில் ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களை வழங்கினார். #GajaCylone #Congress #Elangovan
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #Kiranbedi
காரைக்கால்:
கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. அப்போது காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி காரைக்கால் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடவில்லை. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையில் இருந்து காரைக்கால் வந்தார். அவரை கலெக்டர் கேசவன் வரவேற்றார். பின்னர் கவர்னர் கிரண்பேடி காரைக்கால் அரசலாற்றுக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து திருமலை ராயன்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர் குடை பிடித்தபடி புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் படகுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மீனவர்கள், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பட்டினச்சேரியில் உள்ள கடற்கரையை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கஜா புயல் தொடர்பாக கலெக்டர் கேசவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். #GajaCyclone #Kiranbedi
கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. அப்போது காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி காரைக்கால் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடவில்லை. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையில் இருந்து காரைக்கால் வந்தார். அவரை கலெக்டர் கேசவன் வரவேற்றார். பின்னர் கவர்னர் கிரண்பேடி காரைக்கால் அரசலாற்றுக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து திருமலை ராயன்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர் குடை பிடித்தபடி புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் படகுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மீனவர்கள், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பட்டினச்சேரியில் உள்ள கடற்கரையை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கஜா புயல் தொடர்பாக கலெக்டர் கேசவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். #GajaCyclone #Kiranbedi
மக்களின் நிலையை நேரில் பார்க்க புயல் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மத்திய குழு செல்ல வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #Gajacyclone #GKVasan #CentralCommittee
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக பேச தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
எனவே கடந்த காலத்தை போல் இல்லாமல் புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய குழுவுடன் தமிழக அதிகாரிகள் உடன் செல்லும் போது அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து சென்று பார்வையிட வைக்க வேண்டும்.
சேதம் அடைந்த வீடுகள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், விவசாய நிலங்கள், வாழை மரங்கள், இரால் பண்ணைகள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவற்றை முழுமையாக பார்வையிட்டு மக்களின் நிலையை நேரில் கண்டறிந்து அதற்கேற்ப அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களுக்கும், முழுமையான நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GKVasan #CentralCommittee
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக பேச தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவானது சரியாக ஆய்வு செய்யாமல் முறையான அறிக்கையை சமர்ப்பிக்காததால், தமிழகத்துக்கான நிவாரண நிதி முழுமையாக கிடைக்கவில்லை.
சேதம் அடைந்த வீடுகள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், விவசாய நிலங்கள், வாழை மரங்கள், இரால் பண்ணைகள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவற்றை முழுமையாக பார்வையிட்டு மக்களின் நிலையை நேரில் கண்டறிந்து அதற்கேற்ப அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களுக்கும், முழுமையான நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GKVasan #CentralCommittee
கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புயல் நிவாரண பணிகளை பார்வையிட சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone #OPanneeerSelvam
கந்தர்வக்கோட்டை:
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கந்தர்வக்கோட்டை பகுதியிலும் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த பொது மக்கள், அவரிடம் முறையிடுவதற்காக தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் நாங்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருகிறார்.
எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். இருப்பினும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்ட நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர், மின்சாரம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்றார். இதையடுத்து அவர் மற்ற பகுதிகளை பார்வையிட சென்றார்.
முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneeerSelvam
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கந்தர்வக்கோட்டை பகுதியிலும் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த பொது மக்கள், அவரிடம் முறையிடுவதற்காக தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் நாங்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருகிறார்.
எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். இருப்பினும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்ட நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் அங்கு ஓ.பன்னீர்செல்வம் வரவே, அவரது காரை பொதுமக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், குடிநீர், மின்சாரம் இல்லாதது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் எங்கள் பகுதியில் சேதமான பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneeerSelvam
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்து தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OPS
புதுக்கோட்டை:
கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். #GajaCyclone #OPS
கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். #GajaCyclone #OPS
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X