search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fog"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
    • அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.

    ஆலந்தூர்:

    வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.

    • அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர்.
    • தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மார்கழி மாதத்தில் பனி அதிகமாக பெய்யும். கடந்த ஒரு வாரமாக பனி குறைந்துவிட்ட நிலையில் இன்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர். இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. ஏற்கனவே பனிமூட்டம் ஊருக்கு வெளியில் மட்டும் தெரியும். ஆனால் தற்போது ஊரில் உள்ளேயும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த பனிமூட்டம் எங்கோ தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்மலையனூரில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டபடி சென்றனர்.நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சாரல் மழை பெய்தது. ஆனால் இன்று பனிமூட்டம் காணப்படுகிறது

    • பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.
    • ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    ஆலந்தூர்:

    சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.

    மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    அதேபோல் மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், 2 பெங்களூர் விமானங்கள் கொல்கத்தா, கோவை, ஐதராபாத் ஆகிய 7 விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தாமதமாக தரையிறங்கின.

    அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூர் ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மொத்தம் 14 விமானங்கள் வருவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    • ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.
    • மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின.

    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சோவ் நகரில் ஜெங்சின் ஹுவாங்கே என்கிற மிகப்பெரிய மேம்பாலம் உள்ளது.

    மஞ்சள் ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த மேம்பாலம் ஜெங்சோவ் மற்றும் அண்டை நகரான சின்சியாங்கை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை ஜெங்சோவ் நகரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.

    இதனால் அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதித்து உள்ளூர் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேம்பாலத்தின் இருதிசையில் இருந்தும் வாகனங்கள் தொடர்ந்து பயணித்தன. ஒருகட்டத்தில் முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானது.

    இதனால் மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின. அதனை தொடர்ந்து பின்னால் வந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட டஜன் கணக்கான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

    பாலத்தின் இருதிசையில் இருந்தும் வந்த வாகனங்கள் பல பாலத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டே இருந்தன. இதில் பல கார்கள் மற்றும் லாரிகள் நொறுங்கி, ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்தன.

    இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

    கிட்டத்தட்ட 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலத்தில் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டதை காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

    • டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும்.
    • டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் பனி மூட்டத்தால் ரெயில், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    மேலும் இரவு 11.45 மணிக்கு ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் மற்றும் அதிகாலை 2.15 மணிக்கு ஒரு இண்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த சீசனில் மூடு பனி காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்படுவது இது முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தில் வருவது அல்லது புறப்படும் நேரத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு மேல் மாற்றம் ஏற்பட்டால் அது தாமதம் என வகைப்படுத்தப்படும் என்றார்.

    • சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.
    • தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன.

    அதிகபட்சமாக இன்று அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இதனால் சென்னை- அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன.

    இன்று காலையில் சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 4 மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    கடும் பனி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீ கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் சொட்டர் விற்பனை களைகட்டியது.

    கடும் பனிப்பொழிவுக்கான காரணம் என்ன? என்பதற்கு வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து இருக்கிறது. #RegionalMeteorologicalCentre #Fog
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து இருக்கிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே பனிக்காலம் தொடங்கிவிடும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் இடையிலே பனியின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது.

    நகரப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஏதோ மலைப்பகுதியில் வசிப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அதிகாலையில் பனிமூட்டங்களை பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது.



    இந்த நிலையில் கடும் பனிப்பொழிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும், இன்னும் எத்தனை நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    நமக்கு இது பனிப்பொழிவு காலம் தான். ஆனால் தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால், பூமியின் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. அதோடு கூட, இந்த நேரம் நமக்கு வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவு சூழல் காணப்படுகிறது.

    இன்னும் 10 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும். அதன்பின்னர், வழக்கமான கால சூழ்நிலையை நாம் உணரலாம். மழைக்கான வாய்ப்பு துளி அளவும் கூட இல்லை. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #RegionalMeteorologicalCentre #Fog

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். #BiharFogConditions #VehiclePileup
    முசாபர்பூர்:

    வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல் டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள கஞ்சவாலா-பாவனா சாலையில் நேற்று காலை ஒரு கார் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த காரை நடுரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு, அதில் பயணித்தவர்கள் வெளியேறினர். அப்போது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து தீப்பற்றியது. சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், பலர் காயமடைந்தனர். #BiharFogConditions #VehiclePileup
    திருச்சியில் இன்று காலை திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர்.
    திருச்சி:

    திருச்சியில் தினமும்  காலையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. பகலில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை  திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது.  

    மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 12  மணியளவில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க  சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர். 
    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிமூட்டம் அதிகமானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
    விழுப்புரம்:

    மார்கழி மாதம் பிறந்தாலே பனிப்பொழிவும், கடும் குளிரும் அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது.

    இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே பனியின் தாக்கமும், கடுங்குளிரும் அதிகம் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு சாரல் மழை போல் தூறியது. இன்று காலை 5 மணிக்கு அதிகளவில் பனி கொட்டியது. இதனால் சாலையின் இருபுறமும் சென்ற வாகனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை காணப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன. பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

    இந்த பனிப்பொழிவு விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, ஆசனூர், மடப்பட்டு, திருக்கோவிலூர், எலவநாசனூர்கோட்டை, சின்னசேலம் உள்பட பல இடங்களில் காணப்பட்டது.

    விழுப்புரம் பகுதிகளில் வந்த ரெயில்கள் அனைத்தும் இன்று காலை 8 மணி வரை முகப்பு விளக்கை எரிய விட்டப்படியே வந்தன. #tamilnews
    மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மாமல்லபுரம்:

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த படி பெய்யவில்லை. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், மாமல்லபுரம்-கல்பாக்கம் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கடலோரப் பகுதிகளான கோவளம், வட நெம்மேலி, தேவநேரி, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், கூவத்தூர், காத்தாங்கடை, வடபட்டிணம், பாண்டூர், முகையூர், தென்பட்டினம், அடையாளச்சேரி, நடுக்குப்பம் போன்ற பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

    சாலைகளில் பனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    மார்கழிக்கு முன்னரே கடும் பனிப்பொழிவு துவங்கி விட்டது. எனவே மார்கழி மாதம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என இந்த பகுதி மீனவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

    சூளகிரி அருகே இன்று அதிகாலை கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சூளகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்திற்கு வண்டியின் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்த லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு தேசிய நெடுஞ்சாலை பகுதி அருகே வந்தபோது ஒரே பனி மூட்டமாக இருந்தது. அப்போது ரோட்டோரம் ஜெகதேவியில் இருந்து சூளகிரிக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூளகிரி பகுதி முழுவதுமாக இன்று காலை வரை சாலையில் எதிரே வருபவர்களை யார் என்ற தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது சங்கர் ஓட்டி வந்த லாரியில் விளக்கு எரியவிட்டபடி வந்தும், ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் சரிவர தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    ×