என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "FIFA"
- 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி:
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.
- உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது.
- தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது உள்ளது.
உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனால் இந்திய அணி 106 வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 104–வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தில் உள்ளது உள்ளது.
ஆனாலும் 3-வது இடத்தையே பிடித்தது. அந்த அணி அரை இறுதியில் பிரான்சியடம் தோற்றது. குரோஷியா, இங்கிலாந்து, போர்ச்சுகல், உருகுவே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடத்தில் உள்ளன. #FIFA
அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.
இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திவரும் ‘பிபா’ அமைப்பின் தலைவர் கியானி இன்பான்ட்டினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பேசிய கியானி இன்பான்ட்டினோ, ரஷியா மீது சர்வதேச நாடுகள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார். இதனை வரவேற்ற புதின் இந்த கால்பந்து போட்டிகள் நமது நாட்டுக்கு பல புதிய நண்பர்களை உருவாக்கி தந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். #FIFApresident #WorldCupchanged #perceptionofRussia #GianniInfantino
இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை. கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வி.ஏ.ஆர். முறை அமல்படுத்தியதன் மூலம் ஆப்-சைடு கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷியா வந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் டெலிவிஷன் மூலம் கண்டு களித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup
இதனால் 2020-ல் நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை நடத்த விருப்பம் இருப்பதாக ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பிபாவிற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் பொதுச் செயலாளர் குஷால் தாஸ் கூறுகையில் ‘‘2020 நடைபெற இருக்கும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை தொடரை நடத்த ஏலத்தில் பங்கேற்பதற்கான அனைத்து வகை சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்