search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female suicide"

    • ரகுமான், கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
    • அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ரகுமான் (எ)சக்தி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .

    இவர் கோகிலா (வயது 22) என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சாய் சஷ்டிகா என்ற ஒரு பெண் குழந்தையும், சாய் சர்வேஸ் என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கோகிலா தூக்கிட்டு உள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு செல்வதற்குள் கோகிலா தூக்கில் தொங்கி உள்ளார். உடனடியாக பாலமுருகன் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்த போது கோகிலா ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கோகிலாவுக்கு திருமண மாகி 2 1/2 ஆண்டு களே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை மேற்கொண்டு உள்ளார்

    • அங்கம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.
    • சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு ஆற்றில் இருந்து கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

    திருச்சி,

    திண்டுக்கல் குஜிலியம்பாறை இலந்தை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 33). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.

    பின்னர் முக்கொம்பு அணைப்பகுதியில் காவிரி ஆற்றில் மகனுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அச்சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் அங்கேயே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு படை வீரர்கள்,ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் சம்பவத்தன்று சென்று படகில் அங்கம்மாளை தேடினர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இன்று 5-வது நாளாக திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்கள் கூறும் போது, தற்கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணின் உடலை அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பொதுவாக ஒருவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தால் அந்த பிணம் 24 மணி நேரத்தில் மிதந்து விடும். ஆனால் 5 நாட்கள் ஆகியும் எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகவே அவரது உடலை மணல் மூடி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறியில் ஆற்றில் தவறி விழுந்த மூன்று பேரின் உடல்களை மாதக்கணக்கில் தேடியும் கண்டறிய முடியவில்லை. பின்னர் 3 வருடம் கழித்து மணல் அள்ளியபோது மூன்று பேரின் மண்டை ஓடுகள் கிடைக்கப் பட்டன. எனவே அதிகாரிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
    • புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).

    இவருக்கும் அதை ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது நந்தினி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் நந்தினி தனது வீட்டின் மாடியில் உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளித்து இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நந்தினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவர் புகழேந்தி மற்றும் மாமியாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



    • செங்காட்டுப்பட்டி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37). டிரைவர். இவரது மனைவி சுதா
    • மன உளைச்சலில் இருந்த சுதா நேற்று, அவரது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37). டிரைவர். இவரது மனைவி சுதா (34). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் தமிழ்செல்வனுக்கும் சுதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சுதா கோபித்துக் கொண்டு நாமக்கல்லில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த வாரம் கோபித்துக் கொண்டு தாயார் வீட்டிற்கு சென்ற சுதாவை, தமிழ்செல்வனின் உறவினர்கள் சமாதானம் பேசி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சுதா நேற்று, அவரது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • திருவெண்ணை நல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுபா (வயது 32). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

    • திவ்யா (வயது 31). காதல் திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
    • வீட்டில் தனியாக இருந்த திவ்யா திடீரென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்

    திருச்சி :

    திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் மாதவி தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி திவ்யா (வயது 31). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களுக்கிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த திவ்யா திடீரென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விருந்து சென்று தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம் அருேக தீராத வயிற்றுவலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மனைவி ராஜலஷ்மி (வயது 35). இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்த விஷம்குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை யடுத்து இவரது தந்தை அரசப்பன் கிள்ளை போலீஸங நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் சுமன்ராஜ் (31)இவரது மனைவி சிவரஞ்சனி (30) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமண ம்நடந்தது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்தஜனவரி 13-ந் தேதி தனது கணவருடன் சண்டை போட்டு க்கொண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துஇறந்து போன சிவரஞ்சனி தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துபிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் கோட்டா ட்சியர்பண்ருட்டி துணை போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவரஞ்சனியின் கணவன் சுமன் ராஜை புது ப்பேட்டை போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் பாவாடை. அவரது மனைவி ராஜலட்சுமி. இந்த பாவாடைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவர் பாவாடை மது அருந்தி வீட்டுக்கு வந்த போது மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார்‌.

    இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செஞ்சி அருகே விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    • புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே நல்லாண் பிள்ளை பெற்றால் கிராமத்மை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் லட்சுமி (வயது 26) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்குக்ஷ முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த லட்சுமி வயிற்று வலி அதிகமாக இருந்ததால் திருவண்ணாமலைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாமியார் வீட்டில் சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.இதைப் பார்த்த கணவர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ் பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருப்புவனம் அருகே மாமனார்-மாமியார் தகராறில் திருமணம் முடிந்து 4 மாதத்தில் இளம்பெண் உயிரை பறித்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூரை அடுத்த பத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி இருளாயி. இவர்களது மகன் பாண்டி (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கம்மாள்(19), என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் பெருமாளுக்கும், அவருடைய மனைவி இருளாயிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பெருமாள் தனது மனைவியை திட்டினார். இதில் கோபமடைந்த இருளாயி அது குறித்து தனது மகன் பாண்டியிடம் முறையிட்டுள்ளார்.

    பெற்றோரின் தகராறால் மனம் உடைந்த பாண்டி விஷம் குடித்துள்ளார். தனது கணவர் விஷம் குடித்ததைப் பார்த்து சங்கம்மாளும் விஷம் குடித்து விட்டாராம்.

    இதையடுத்து விஷம் குடித்த புதுப்பெண்ணையும், அவருடைய கணவரையும் உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டி குணமடைந்த நிலையில், அவரது மனைவி சங்கம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி தகராறு அவரது மகனை விஷம் குடிக்க வைத்ததுடன், வாழ வந்த மருமகளின் உயிரையும் பறித்தது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #tamilnews
    தாம்பரம் அருகே திருமணமான 10 மாதத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மறைமலை நகரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். இவரது மனைவி சவுமியா (31). கிண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாக மேலாளராக பணிபுரிகிறார்.

    இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதில் இருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று இரவு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சவுமியா வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிட்லபாக்கம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 10 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. #tamilnews
    ×