என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே வரதட்சணை கொடுமையால்  பெண் தற்கொலை  கணவன் கைது
    X

    பண்ருட்டி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை கணவன் கைது

    • திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் சுமன்ராஜ் (31)இவரது மனைவி சிவரஞ்சனி (30) இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமண ம்நடந்தது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்தஜனவரி 13-ந் தேதி தனது கணவருடன் சண்டை போட்டு க்கொண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துஇறந்து போன சிவரஞ்சனி தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துபிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் கோட்டா ட்சியர்பண்ருட்டி துணை போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவரஞ்சனியின் கணவன் சுமன் ராஜை புது ப்பேட்டை போலீசார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×