என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிமடம் அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை
- ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
- புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
இவருக்கும் அதை ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது நந்தினி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நந்தினி தனது வீட்டின் மாடியில் உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளித்து இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நந்தினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவர் புகழேந்தி மற்றும் மாமியாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்