என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer death"
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் தம்பிக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது பாமினி ஆற்று பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி, பார்பரம்மாள்புரம், நம்பியாறு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
நாங்குநேரி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கிராமத்தில் மழை பெய்தபோது அந்த பகுதியை சேர்ந்த முத்து என்ற விவசாயி காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை இடி தாக்கியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இடி தாக்கியதில் பரப்பாடி பாரதிநகரை சேர்ந்த முத்து செல்வி , செல்வகுமார் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மற்றும் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நம்பியாற்றில் 55 மில்லி மீட்டரும், ராதாபுரம் பகுதியில் 16 மில்லி மீட்டரும், சிவகிரி பகுதியில் 14 மில்லி மீட்டரும் மழை பெய்திருக்கிறது.
கருப்பாநதி, அம்பை, அடவிநயினார் பகுதியில் தலா 10 மில்லிமீட்டரும், சங்கரன்கோவில், சேரன்மகாதேவியில் தலா 4 மில்லிமீட்டரும், சேர்வலாறு, மணிமுத்தாறு, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆனாலும் நீர்மட்டம் உயரவில்லை. பாபநாசம் அணையில் 82.30 அடியாகவும், சேர்வலாறு அணையில் 86.88 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 89.80 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 49 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள கோலியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது70), விவசாயி. இவர் நெல் அரைப்பதற்காக பணகுடியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றார். அங்கு எந்திரத்தில் நெல்லை கொட்டும் போது பகவதி தவறி எந்திர பெல்டில் விழுந்தார்.
இதில் தூக்கி வீசப்பட்ட பகவதியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே பகவதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அரிசி ஆலை நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 57). விவசாயி. இவர் சம்பவத்தன்று ஆரணி சேத்துபட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் காத்தரவராயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு காத்தவராயன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் கருவாடன்செட்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன். (வயது 40). விவசாயி. அவரது மனைவி காளீஸ்வரி. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நாடுகண்டனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. இந்த கார் சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குசெல்வதற்காக 8 பேர் காரில் வந்தனர். இந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மனைவி கண் முன் உடல் நசுங்கி பலியானார்.
அதோடு காரில் வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.
இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்காம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 45).விவசாயி.
இவர் தனது நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வது வழக்கம்.
அங்கு மான், காட்டுப்பன்றி, மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் கல்வராயன் மலை, கரியகோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மோடூர் மலைக்கிராமத்திற்கு வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.
அவர்கள் புதர் மறைவில் இருந்து வனவிலங்குகளை கண்காணித்தனர்.
அப்போது செல்வராஜ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். உடனே செல்வராஜியின் நண்பர்கள் 3 பேரும் அவரது உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு பிணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரெண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேட்டைக்கு சென்ற செல்வராஜ் எப்படி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. புதர் மறைவில் இருந்து வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது அவருடன் சென்ற நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.
செல்வராஜியின் உடலை அவரது வீட்டு முன்பு போட்டு சென்ற நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகிய 3 பேரும் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தலை மறைவாகி விட்டனர்.
இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.நண்பர்கள் சிக்கினால் தான் செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
மர்மமாக இறந்த செல்வராஜிக்கு சரோஜா என்ற மனைவியும், ராமமூர்த்தி (9), சத்யமூர்த்தி (8), ஜெயவேல் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் செல்வராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இச்சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.
இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்
இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்