search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை அருகே மனைவி கண்முன் கார் மோதி விவசாயி பலி
    X

    வடமதுரை அருகே மனைவி கண்முன் கார் மோதி விவசாயி பலி

    வடமதுரை அருகே மனைவி கண் முன் கார் மோதி விவசாயி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புத்தூர் கருவாடன்செட்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன். (வயது 40). விவசாயி. அவரது மனைவி காளீஸ்வரி. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    நாடுகண்டனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. இந்த கார் சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குசெல்வதற்காக 8 பேர் காரில் வந்தனர். இந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மனைவி கண் முன் உடல் நசுங்கி பலியானார்.

    அதோடு காரில் வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×