என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பட்டுக்கோட்டை அருகே புயலால் விழுந்து கிடந்த மின்கம்பி அறுந்து விவசாயி பலி
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). விவசாயி. இவரது மனைவி தங்கம். 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று வாட்டாக்குடி தெற்கு மெயின் ரோட்டில் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் கஜா புயலால் சேதமாகி சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக மின்கம்பி தொங்கி கொண்டிருந்தது.
இதை கவனிக்காமல் திருநாவுக்கரசு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மின்கம்பி அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதுக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருநாவுக்கரசு உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் சேதமான மின்கம்பங்கள் பல இடங்களில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் மின்கம்பி அறுத்து விவசாயி பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்