என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer death"
- சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.
- விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 67). விவசாயி. இவர் சம்பவத்தன்று சேத்தியாத்தோப்பில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆணைவாரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீச்ப்பட்ட ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மை மோசமானது. எனவே ஜெயராமன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இறந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.
- கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 60). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக அந்தூரில் இருந்து குன்னம் நோக்கி நடந்து சென்றார்.
அப்போது குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசனின் மனைவி உஷா(26) என்பவர் குன்னம் தாலுகா அலுவலகம் செல்வதற்காக மொபட்டில் வந்தார். முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராவிதமாக மொபட் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அண்ணாதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அதேபோல் உஷாவும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் அண்ணாதுரையை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி சின்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."
சாத்தூர் அருகே உள்ள வன்னிமடையை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 69). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வந்து விட்டது. ஆனால் கன்றுக்குட்டி மற்றும் வேலுசாமி வீட்டிற்கு வரவில்லை.
உடனே வேலுசாமியின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வன்னிமடையில் இருந்து நென்மேனி செல்லும் சாலை ஓரத்தில் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் கன்றுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள சிறுமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 55) விவசாயி.
இவர் இன்று காலை தனது சைக்கிளில் அருகே உள்ள மேலவாசலுக்கு சென்றார். அங்கு மார்க்கெட்டில் மீன் வாங்கி விட்டு வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். சிறுமங்கலம் அருகே தஞ்சை-மன்னார்குடி சாலையில் வந்தபோது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான வேனை அடித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த வடுவூர் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நம்பியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது62). விவசாயி. இவர் நேற்று சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் இரும்பறை ரோட்டில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் வந்தபோது அந்த வழியே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள சென்னாம்பள்ளியை பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது60). விவசாயி. இவர் நேற்று மாலை குடியாத்தம் காட்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் முனிரத்தினம் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்