என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் அருகே விபத்தில் விவசாயி பலி- அரசு பஸ் டிரைவர் கைது
Byமாலை மலர்19 Dec 2018 1:12 PM GMT (Updated: 19 Dec 2018 1:12 PM GMT)
நொய்யல் அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானர். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 83), விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாலத்துறை அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு இரவு தனது சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவரின் பின்னால் வந்த அரசுப்பேருந்து சைக்கிள் மீது மோதியது.
இதில் பெரியசாமியின் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெரியசாமி மகன் செந்தில் நாதன் (40) வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரசுப்பேருந்து ஓட்டுனர் சேலம் மாவட்டம் கண்டக் காப்பட்டியை சேர்ந்த நல்ல தம்பி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் இறந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X