என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Family Problem"
ராஜாக்கமங்கலத்தை அடுத்த தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 59). தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், 3-வது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதில் 3-வது மனைவி சவரியம்மாளுக்கும் ராஜபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30). இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தண்டல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகேசனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த முருகேசன் கருவேலம் பட்டியில் உள்ள சகோதரர் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை மேலூர் அருகேயுள்ள வெள்ளிமலைப் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மேலும் தகராறு அதிகரித்தது.
இதில் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45).அ.தி.மு.க. நிர்வாகியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி (43). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பரமசிவத்திற்கு குடி பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குடிபழக்கத்தை கைவிடுமாறு மலர்விழி பலமுறை வற்புறுத்தியும் பரமசிவம் கை விடவில்லை.
இந்தநிலையில் நேற்றிரவும் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மலர்விழி தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து மலர்விழியை சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் தாயை தந்தை தாக்கியது தொடர்பாக பரமசிவத்தின் மகன் ராஜதுரை, அவரது தாத்தாவும், பரமசிவத்தின் தந்தையுமான நடேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து நடேசன் , ஆஸ்பத்திரியில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த பரமசிவத்திடம் ஏன் மலர்விழியை தாக்கினாய் என்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நடேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் பரமசிவத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மலர்விழியும் இறந்தார்.
குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலர்விழியின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேசனை கைது செய்தனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 50) லாரி டிரைவர். இவரது மனைவி ஸ்டெல்லா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவும் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த ஸ்டெல்லா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரது உடல் கருகியது. கணவர் சுப்பையா அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் தீக்காயம் அடைந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டெல்லா இறந்தார். சுப்பையா தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது39). இவருடைய தம்பி ராஜேஷ்(31). இவர்கள் பரமேஸ்வரன் காலனியில் எதிர் எதிர் வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை சின்னப்பனும், ராஜேசும் தங்கள் வீடுகளில் இருந்தனர். அப்போது திடீரென இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சின்னப்பன் தனது வீட்டில் இருந்து கூர்மையான ஆயுதமான சுளுக்கியை எடுத்து வந்து ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுப்பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து சின்னப்பனை பிடித்து வைத்துக்கொண்டு திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னப்பனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவி உள்ளார்.
தேனி:
தேனி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் பிச்சை முருகன் (வயது 49). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் துரைசாமிபுரம், வேப்பமரத் தெருவைச் சேர்ந்த பாக்கியலெட்சுமி (34). என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
பாக்கியலெட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிச்சை முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பாக்கியலெட்சுமி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தாயை பார்ப்பதற்காக அவர்களின் மகள் பிரியதர்ஷினி அங்கு சென்றுள்ளார். இதனால் பிச்சை முருகன் ஆத்திரமடைந்து மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
எனவே பாக்கியலெட்சுமி தனது மகளை பிச்சை முருகனிடம் ஒப்படைக்க சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தன்னை மீறி மகளை அழைத்துச் சென்றதாக பாக்கியலெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்கியலெட்சுமியை சரமாரியாக பிச்சை முருகன் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பாக்கியலெட்சுமி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சை முருகனை கைது செய்தனர்.
கோவை மாவட்ட எல்லை பகுதியான கே.ஜி. சாவடி அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா தேவி (30).
இவர்களுக்கு சாய்மகதி (4) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜெகதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு உருவானது.
அதன் பின்னர் காஞ்சான தேவி மற்றும சாய்மகதி ஆகியோர் மாயமானார்கள். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான தாய்-மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சனா தேவியும், சாய்மகதியும் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி இறங்கி தாய் -மகள் உடலை மீட்டனர்.
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு காஞ்சனா தேவி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை:
கோவை கருமத்தமப்பட்டி அருகே உள்ள பெரிய மோரிப்பாளையம் தோட்டத்து சாலையை சேர்ந்தவர் நாச்சி முத்து (வயது 38). விசைத்தறி உரிமையாளர்.
சம்பவத்தன்று இவர் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாச்சி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனைமலை ரெட்டியூரை சேர்ந்தவர் பிரசாந்த் (27). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரசாந்த் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பிரசாந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை வெங்கிடாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவர் தடாகம் சாலையில் மெஸ் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பிரிய தர்ஷினி(32). இவர்களுக்கு ஏஞ்சலின், லீனா, ஹனி என்ற 3 மகள்கள் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரவிக்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று பிரிய தர்ஷினி, ஏஞ்சலின், லீனா ஆகியோர் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஹனி வீட்டில் இருந்து கதறியபடி வெளியே ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், விஷம் குடித்து மயங்கி விழுந்த மனைவி, குழந்தைகளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாய்பாபாகாலனி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். இது தொடர்பாக ரவிக்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்