search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife murder"

    திருச்சி அருகே குடும்ப தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45).அ.தி.மு.க. நிர்வாகியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி (43). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பரமசிவத்திற்கு குடி பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குடிபழக்கத்தை கைவிடுமாறு மலர்விழி பலமுறை வற்புறுத்தியும் பரமசிவம் கை விடவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவும் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மலர்விழி தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து மலர்விழியை சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாயை தந்தை தாக்கியது தொடர்பாக பரமசிவத்தின் மகன் ராஜதுரை, அவரது தாத்தாவும், பரமசிவத்தின் தந்தையுமான நடேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து நடேசன் , ஆஸ்பத்திரியில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த பரமசிவத்திடம் ஏன் மலர்விழியை தாக்கினாய் என்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நடேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் பரமசிவத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மலர்விழியும் இறந்தார்.

    குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலர்விழியின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேசனை கைது செய்தனர்.

    ×