search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife sickle cut"

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் பிச்சை முருகன் (வயது 49). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் துரைசாமிபுரம், வேப்பமரத் தெருவைச் சேர்ந்த பாக்கியலெட்சுமி (34). என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    பாக்கியலெட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிச்சை முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பாக்கியலெட்சுமி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    தாயை பார்ப்பதற்காக அவர்களின் மகள் பிரியதர்ஷினி அங்கு சென்றுள்ளார். இதனால் பிச்சை முருகன் ஆத்திரமடைந்து மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

    எனவே பாக்கியலெட்சுமி தனது மகளை பிச்சை முருகனிடம் ஒப்படைக்க சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தன்னை மீறி மகளை அழைத்துச் சென்றதாக பாக்கியலெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்கியலெட்சுமியை சரமாரியாக பிச்சை முருகன் வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த பாக்கியலெட்சுமி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சை முருகனை கைது செய்தனர்.

    ×