search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man attack"

    சிவகாசியில் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகன் சதீஷ்குமார் (25). தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தந்தை என்றும் பாராமல் மாரிமுத்துவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டார். இதில் தலைநசுங்கி மாரிமுத்து அதே இடத்தில் துடி துடித்து இறந்து போனார். தந்தையை கொன்ற சதீஷ்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வாலிபர் சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×