என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாக்கமங்கலத்தில் 3-வது மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்13 April 2019 11:03 AM GMT (Updated: 13 April 2019 11:03 AM GMT)
ராஜாக்கமங்கலத்தில் 3-வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலத்தை அடுத்த தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 59). தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், 3-வது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதில் 3-வது மனைவி சவரியம்மாளுக்கும் ராஜபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30). இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலத்தை அடுத்த தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 59). தொழிலாளி.
இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி இறந்துவிட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், 3-வது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதில் 3-வது மனைவி சவரியம்மாளுக்கும் ராஜபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் நேற்று வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30). இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X