search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam"

    • 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அரியலூர்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கக்கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    தொடக்க கல்வியில் முல்லையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கையன், பெரிய திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பள்ளி கல்வியில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலோற்பவம், சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகுணா, மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜேந்திரன் ஆகிய 8 பேருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.

    எஸ்.பி. ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.

    • திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு ஏழு மையகளில் நடைபெற்றது
    • மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர்

    திருச்சி,

    சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கான எழுத்துத்ேதர்வு திருச்சி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 7,402 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்த முதல் கட்ட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 402 பேரில் ஆண்கள் 4,555 பேரும், பெண்கள் 1,540 பேர் என மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர். இதில் 961 ஆண்கள், 346 பெண்கள் என மொத்தம் 1,307 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தேர்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
    • 2584 பேர் தேர்வெழுதிய நிலையில், 571 பேர் தேர்வெழுத வரவில்லை

    பெரம்பலூரில்

    தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.

    • பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
    • நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி வருவாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி தேர்தல் ஆணையாளர் அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணையராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் பணியாற்றினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ் , மாவட்ட பொருளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செயலாளராக அமிர்தம், தலைமை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனிவாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாளர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுசெயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் இன்று காலை தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வாளர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இதேப்போல் ஆண்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து நின்று இளைஞர்கள் தேர்வு எழுதினர்.திருப்பூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர்.

    • தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
    • எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    கோவை,

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது .

    கோவையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய 4 மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

    இந்த தேர்வு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடந்தது. 7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    • பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது
    • பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் இன்று  நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 3 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களுக்கான தேர்வுகள் பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 6 தேர்வு மையங்களில், 158 அறைகளில் தேர்வுகள் நடைபெற்றது. 

    • தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., உள்ளிட்ட அனைத்து பாட, மாத தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 28ந் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேணடும்.தொலைதூர கல்வி தேர்வு சார்ந்த விபரங்களை https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பல்கலை க்கழக இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • கரூர் மாவட்ட எறிபந்து அணிக்கு அரவக்குறிச்சி அரசு கலலூரி மாணவி நந்தீஸ்வரி தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை, முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு எறிபந்து கழக அனுமதியுடன், சேலம் மாவட்ட எறிபந்து விளையாட்டு சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி நத்தீஸ்வரி தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக கீழப்பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
    • ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜிக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் கற்பகம், சுதந்திர தின விழாவின் போது சத்யா காமராஜிடம் பாராட்டி வழங்கினார்.

    மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×