search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 2,479 பேர்  எழுதினர்
    X

    பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும்,  ஹால்டிக்கெட்டுகளை போலீசார் சரிபார்த்ததையும் படத்தில் காணலாம்.   

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 2,479 பேர் எழுதினர்

    • தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் இன்று காலை தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வாளர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இதேப்போல் ஆண்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து நின்று இளைஞர்கள் தேர்வு எழுதினர்.திருப்பூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர்.

    Next Story
    ×