search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு
    X

    தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு

    • பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
    • நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி வருவாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி தேர்தல் ஆணையாளர் அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணையராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் பணியாற்றினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ் , மாவட்ட பொருளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செயலாளராக அமிர்தம், தலைமை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனிவாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாளர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுசெயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×