search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பு"

    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
    • நிகழ்ச்சியில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

    விழாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார்.

    தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி - ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் முதன்மையர் செந்தில்குமார் மற்றும் ஒன் லைப் ஒன் சாய்ஸ் லைஃப் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவரும் உளவியல் பயிற்சியாளருமான கார்த்திக் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நு ட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

    கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் மோகன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன், முதலா மாண்டு துறை முதன்மையர் தேவராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை துறைதலைவர் முனைவர் தீபா, கூடுதல் துறை தலைவர்கள் முனைவர் பொன்சடைலட்சுமி, முனைவர் தாரணி, முனைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    • கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.
    • கணினி அறிவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பைத்தான் பற்றிய பயிற்சி நடைபெற்றது .

    இதனை கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர் இன்போசிஸ்டம் நிர்வாக இயக்குநர் பழனியப்பன், பயிற்சியாளர்கள் அபிநயா, அகல்யா ஆகியோர் மாணவர்களுக்கு பைத்தான் குறித்து பயிற்சியளித்தனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் நிலவு வரவேற்புரை ஆற்றினார்.

    தமிழ் துறை தலைவர் இராஜா வரதராஜா வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் முருகானந்தம் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது
    • அரசு கலைக்கல்லூரிகளில் அரசு கலைக்கல்லூரிகளில்

    புதுக்கோட்டை

    தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னர் கல்லூரி, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்க மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள். சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வருவார்கள். கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • அரும்பு, மொட்டு மற்றும் மலர் என 3 வகைகளில் பிரித்து மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாநில அளவிலான பயிற்சி வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதை ஒட்டி வரும் 18-ந் தேதி மதுரையில் மாநில அளவிலான பயிற்சி தொடங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தொடக்கக் கல்வியில் ஏற்பட்ட தேக்கத்தை சரிசெய்ய மாநில அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் பள்ளிகள் நேரடியாக செயல்படாத நிலையில் கற்றலில் மாணவர்களிடம் ஏற்பட்ட இடைவெளியை படிப்படியாக குறைக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

    குறிப்பாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் அரும்பு, மொட்டு மற்றும் மலர் என 3 வகைகளில் பிரித்து மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்டவர்களுக்காக இந்த திட்டம் மிகவும் பயன் அளித்தது.

    கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பல்வேறு மனச்சிதறல்களுக்கு ஆளான நிலையில் அவர்களின் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் அரும்பு, மொட்டு மற்றும் மலருக்கான செயல்வழிகற்றல் பாடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது தொடர்ந்து 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் மதுரையில் நடைபெறுகிறது.

    இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 18 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து மாவட்ட அளவிலான பயிற்சி வரும் 25-ந் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ம் தேதி தொடங்கி வரும் 3-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது" என்றனர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டு 2025-ம் ஆண்டுக்குள் கொரோனா காலகட்டத்தில் பள்ளி செல்ல முடியாத அனைத்து குழந்தைகளும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதன் அடுத்தகட்டமாக தற்போது இத்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற வேண்டும் என்பதன் முக்கிய நோக்கத்தையே இத்திட்டத்தின் விரிவாக்கம் காட்டுவதாக சொல்கின்றனர் கல்வியாளர்கள்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
    • தேர்வு துறையில்‌ வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின்‌ போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள்‌ மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.

    தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.

    முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.

    • ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
    • அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×