என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
- தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
- எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
கோவை,
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது .
கோவையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய 4 மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.
இந்த தேர்வு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடந்தது. 7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்