search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
    X

    கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

    • தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
    • எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    கோவை,

    தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது .

    கோவையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய 4 மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

    இந்த தேர்வு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடந்தது. 7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    Next Story
    ×