search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering"

    • பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
    • கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை :

    மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது.

    முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் இன்று மாலையுடன் அவகாசம் முடிகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    • விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
    • சி.பி.எஸ்.இ. மாணவர்களும் விண்ணப்பிக்க தொடங்கினர்

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19-ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் இருந்தே என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு எண்ணிக்கை உயரத்தொடங்கி இருக்கிறது.

    அதற்கு முந்தைய நாட்கள் வரை தினமும் 1,000 பேர் பதிவு செய்து வந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரும் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர்.

    அந்த வகையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 1 லட்சத்து 99 ஆயிரத்து 213 பேர் விண்ணப்ப பதிவை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தி உள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 463 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) ஆகும்.

    • திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் அனைத்து திறமைகளும் அவர்களுக்கும் உள்ளது.
    • மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாக எண்ணாமல் நன்மதிப்புடன் மதிக்க வேண்டும் என்றார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான திருநங்கைகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமாண அப்துல் கனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் அனைத்து திறமைகளும் திருநங்கைகளுக்கு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாகவும் கேவலமாகவும் எண்ணாமல் நன்மதிப்பு அளிப்பதுடன் மற்றவ ர்களும் திருநங்கைகளை மதிக்க சொல்லித் தர வேண்டும் என்று கூறினார்.

    முகாமில் சிறந்த திருநங்கைகாண டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி என்ற திருநங்கையும் மற்றும் பொறியியல் பட்ட படிப்பு முடித்த திருநங்கையும் கலந்து கொண்டு மாணவர்கள் திருநங்கை களுக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்பது பற்றி கூறினார்கள் முகாமில் கல்லூரி முதல்வர்கள் நேர்முக உதவியாளர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசே கரன் செய்திருந்தார்.

    தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது. #EngineeringAdmission #QualifyingMarks
    சென்னை:

    தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே  2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிசி,  எம்.பி.சி, பிசி முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும். #EngineeringAdmission #QualifyingMarks
    வாராக்கடன் அதிகரித்துள்ளதால் என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #IndianBank
    சென்னை:

    ஏழை மாணவர்கள் என்ஜீனியரிங் படிப்பதற்கு மத்திய அரசு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் படித்து ஒரு ஆண்டு வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும்.

    வேலை கிடைத்ததும் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால் ஏராளமான மாணவர்கள் படிப்பு முடிந்தும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.

    தேசிய வங்கியான இந்தியன் வங்கியில் ஏராளமான கல்விக்கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் வராக்கடனாக உள்ளது.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    மருத்துவம், உயர்படிப்புகள், மேல்நாட்டு படிப்புகளுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    வராக்கடனை வசூலிக்க அதற்காக அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலித்து வருகின்றனர். #IndianBank
    மருத்துவ மாணவர் சேர்க்கையை போல் என்ஜினீயரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். #Engineering #NEET
    சென்னை:

    தமிழ்நாட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு மார்க் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று கூறி நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.

    ஆனால் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நீட்தேர்வு கட்டாய நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டும் அதே நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கையையும் அகில இந்திய நீட் தேர்வு அடிப்படையில் நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

    இந்த தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். சென்னையில் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. பூனியா இந்த தகவலை வெளியிட்டார்.


    அவர் கூறும்போது, மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு போலவே என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே 2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி நீட் தேர்வையே இப்போதும் கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிக்கும் நீட்தேர்வு வரும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Engineering #NEET
    என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது.
    சென்னை:

    இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாளை (6-ந்தேதி) கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் அன்று சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான தகவல் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கிட்டு பிரிவு மாணவர்கள் 7-ந்தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 8-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

    காலை 9.00 மணி, 10.30 மணி, நண்பகல் 12 மணி என 3 கட்டங்களாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதற்கான தகவல்கள் மாணவர்களுக்கு இ.மெயில், எஸ்.எம்.எஸ். வழியே அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுப்பிரிவு மாணவர்கள் தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லூரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை https:www.tnea.ac.in மற்றும் www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
    அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று காலை தொடங்கியது. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அசல் சான்றிதழ்களை பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. 1 லட்சத்து 59 ஆயிரம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    மாணவ- மாணவிகள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் கல்லூரிகளை தேர்வு செய்வது வரை இந்த உதவி மையங்கள் மூலம் நடைபெறுகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக பல்கலைக்கழக ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற 14-ந்தேதி வரை இப்பணி நடைபெறுகிறது.

    விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த உதவி மையங்களில் குறித்த நேரத்திற்கு சென்று சான்றிதழ்களை காண்பித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கான உதவி மையம் செயல்படுகிறது. இந்த உதவி மையத்தில் 100-க்கும் மேலான கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு இணைய தள வசதி செய்யப்பட்டு இருந்தன.


    சான்றிதழ் சரிபார்க்கும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது. மாணவ- மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அசல் சான்றிதழ்களை பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரிய ராஜ் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது.

    விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த சான்றிதழ்கள் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்து அதன் பின்னரே அனுப்பப்பட்டனர்.

    மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் குவிந்தனர். தினமும் 20 ஆயிரம் பேர் வீதம் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். #AnnaUniveristy
    பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணிப்பத்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாளை 42 யைமங்களில் தொடங்குகிறது. 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் தினமும் அழைக்கப்படுகிறார்கள். #Engineering #AnnaUniversity
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வு முறையினை இந்த ஆண்டு முதன் முதலாக செயல்படுத்துகிறது.

    இணைய தளம் வழியாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரேண்டம் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த 42 உதவி மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த மையங்களுக்கு சென்று இணைய தளம் வழியாக கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். முதல் கட்டமாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நாளை (8-ந்தேதி) தொடங்கி 14-ந்தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது.

    சென்னையில் மட்டும் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரி பார்ப்பதற்கு எந்தெந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பது குறித்த தகவல் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

    தினமும் 20 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தகவல் அனுப்பப்படுகிறது. தேதி, நேரம், டோக்கன், எண் போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்புகின்றனர்.

    இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-


    20 ஆயிரம் மாணவர்கள் வீதம் தினமும் அழைக்கப்படுகிறார்கள். மாணவர்கள் எந்த தேதியில், எந்த நேரத்திற்கு உதவி மையத்திற்கு வர வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள காலத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் உதவி மையம் வந்துவிட வேண்டும்.

    எஸ்.எம்.எஸ். தவிர இ.மெயில் மூலமாகவும் இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னையில் அண்ணா பல்லைக்கழகம், காஞ்சீபுரத்திற்கு எம்.ஐ.டி., திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை உதவி மையங்களாக செயல்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விண்ணப்பதாரர்கள் வேறு ஏதாவது கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இருந்து ஒரிஜினல் சான்றிதழ் அங்கு இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும். மேலும் அந்த சான்றிதழ்களின் நகல்களில் நிறுவனத்தின் முத்திரையிட்டு உரிய அதிகாரி கையெழுத்து பெற வேண்டும்.

    ஆனாலும் ஒரிஜினல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் வரை ஒரிஜினல் ஒதுக்கீட்டு ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அதனால் கலந்தாய்வில் ஒதுக்கீட்டு கடிதம் பெறும் வரையில் மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வர முடியாத பட்சத்தில் பெற்றோர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் போட்டோவுடன் கூடிய கடிதத்தை பெற்றோர் சமர்பிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளமாக காண்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்த்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரி பார்ப்புக்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிளஸ்-2 ஹால் டிக்கெட், மாற்று சான்றிதழ் (டி.சி.), ஜாதிச்சான்று, குடியுரிமை சான்று, வருவாய் சான்று, சிறப்பு சலுகை பெறக்கூடியவர்கள் அதற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். #Engineering #AnnaUniversity
    என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்திற்கு மேல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 35 சதவீதம் ஆகும்.

    அதுவே கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம்.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

    இந்த வருடம் முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பிக்க இயலாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.

    இந்த மையங்களில் விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் இலவசம்.

    என்ஜினீயரிங் படிப்பதற்கு இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் உதவி மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்பது குறிப்பிடத்தகுந்தது. 
    மாநில பாடத்திட்டத்தில் படித்து என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கட்-ஆப் உயரும் என தெரிகிறது. #CBSE
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதன் முதலாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த தேதியில் கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த வருடம் பொறியியல் கட்-ஆப் குறைகிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால் கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதால் கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு இப்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு இழந்தவர்களுக்கும் கட்-ஆப் குறைவதால் வாய்ப்பு உருவாகும்.

    கடந்த ஆண்டு இடம் கிடைக்காமல் இருந்த மாணவர்களுக்கு இந்த வருடம் கலந்தாய்வில் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வைப் பொருத்தவரை, பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அதனால் அவர்களுக்கு கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பொதுவாக என்.ஐ.டி., எம்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் சேரவே ஆர்வம் காட்டுவார்கள். பொறியியல் கல்லூரிகளில் மிக குறைந்த அளவில்தான் சேருவது வழக்கம்.

    பொதுவாக ஜே.இ.இ. தேர்வு எழுதி தேசிய அளவிலான தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு தான் விரும்புவார்கள். அதனால் பொறியியல் கட்-ஆப் மார்க் உயர்ந்தாலும் அதனால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. #CBSE
    என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் விரும்பாததால் இந்தாண்டு பதினைந்து ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன. #Engineering
    சென்னை:

    சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்களிடம் அதிக மவுசு இருந்தது. போட்டி போட்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் என்ஜினீயரிங் படித்து வந்தனர். ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து என்ஜினீயரிங் படிப்பு மீதான மவுசு குறைந்து கொண்டே வருகிறது.

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடங்கள் முழுமையாக நிரம்பாமல் காலியாக இருந்தன. இதன் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. மேலும், பல என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.

    மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டு சேர்க்கையை நிறுத்தும்படியும் சில கல்லூரிகளை மூடும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. என்ஜினீயரிங்கில் சில பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் அந்த பாடப்பிரிவை நீக்கும்படியும் கூறி உள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 139 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்களை குறைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட 15 ஆயிரத்து 981 என்ஜினீயரிங் இடங்கள் இந்த ஆண்டு குறைகிறது.

    தமிழ்நாட்டில் 12 என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 3252 இடங்கள் குறைகிறது. 9 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதி அளிக்கப்படவில்லை. 87 என்ஜினீயரிங் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை.

    இந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 57 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்களை குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. #Engineering
    ×