என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு: என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Byமாலை மலர்1 Jun 2018 3:08 AM GMT (Updated: 1 Jun 2018 3:08 AM GMT)
என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்திற்கு மேல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 35 சதவீதம் ஆகும்.
அதுவே கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இந்த வருடம் முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பிக்க இயலாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த மையங்களில் விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் இலவசம்.
என்ஜினீயரிங் படிப்பதற்கு இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் உதவி மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்திற்கு மேல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 35 சதவீதம் ஆகும்.
அதுவே கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இந்த வருடம் முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பிக்க இயலாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த மையங்களில் விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் இலவசம்.
என்ஜினீயரிங் படிப்பதற்கு இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் உதவி மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X