search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சட்ட விழிப்புணர்வு முகாம்

    • திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் அனைத்து திறமைகளும் அவர்களுக்கும் உள்ளது.
    • மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாக எண்ணாமல் நன்மதிப்புடன் மதிக்க வேண்டும் என்றார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான திருநங்கைகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமாண அப்துல் கனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் அனைத்து திறமைகளும் திருநங்கைகளுக்கு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாகவும் கேவலமாகவும் எண்ணாமல் நன்மதிப்பு அளிப்பதுடன் மற்றவ ர்களும் திருநங்கைகளை மதிக்க சொல்லித் தர வேண்டும் என்று கூறினார்.

    முகாமில் சிறந்த திருநங்கைகாண டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி என்ற திருநங்கையும் மற்றும் பொறியியல் பட்ட படிப்பு முடித்த திருநங்கையும் கலந்து கொண்டு மாணவர்கள் திருநங்கை களுக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்பது பற்றி கூறினார்கள் முகாமில் கல்லூரி முதல்வர்கள் நேர்முக உதவியாளர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசே கரன் செய்திருந்தார்.

    Next Story
    ×