search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்றிதழ்கள்"

    • மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    இதைதொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்பட முக்கிய ஆவணங்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதை கருத்தில் கொண்டு, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
    • கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறை வடைகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டு சாலை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்தநாளி னை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி லட்சுமணன் ஆகியோா இன்று (14.10.2023) கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி யும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்படி, அண்ணா பிறந்த நாளினை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று, விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு, மிதி வண்டி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி யானது, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலி யனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தி லும், 13 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலியனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம் வீரன் கோவிலி லும், 15 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி யானது, கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பக்கம், காகுப்பம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 15 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்திலும், 17 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலி யனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் வழி யாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்க ளுக்கு ரூ.5000-, 3,000-, 2,000-, எனவும் 4 முதல் 10 வரை இடங்களை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250- வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கோலி யனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சி தாநந்தம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் வேல்முரு கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி.
    • அடிப்படை பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது எப்படி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    இதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி? தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி? அடிப்படை பிரச்சினை களுக்கு புகார் அளிப்பது எப்படி? சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி? போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாரத்தான் போட்டி பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.
    • அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழுப்புரம், மே.2-

    விவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மஞ்சப்ைப அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவி லான மினி மாரத்தான் போட்டி விழுப்புரத்தில் நடை பெற்றது. இப்போட்டி யை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாண வர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழி யாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடி வடைந்தது. இப்போட்டி யில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், திருநங்கை கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனை அமைச் சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பழனி, டாக்டர் பொன்.கவுதமசிகா மணி எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சு மணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சேதுராமன், விஜயகுமார், ராஜ்குமார் தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி முன்னிலை வைத்தனர். ஆசிரியர் இன்பாலன் வரவேற்றார்.

    மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் உமா மகேஸ்வரன் மாணவர்களுக்கு தன்னை அறிதல், இலக்கினை நிர்ணயித்தல், பொறுப்புணர்வுகளை நினைத்து செயல்படுதல், நினைவாற்றல் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள், படிப்பதற்கான வழிமுறைகள், படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், தேர்வினை எழுதும் போது செய்ய வேண்டியவை போன்றவை குறித்து பயிற்சி அளித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

    • ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.

    கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.

    வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் டெல்டா ஓபன் ரேஸ் பந்தயபுறா போட்டியில் வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பண்டாரவாடையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை கிளப் தலைவர் ஏ.ஆர்.தன்சிங் தலைமை வகித்தார். அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் துளசி ஐயா, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவர் அணி பொறுப்பாளர் முகமது மகரூப், மாவட்ட கவுன்சிலர் ராயல் அலி மற்றும் புறா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் 2019 முதல் 2022 வரையிலான பந்தய புறா போட்டிகளில் 1000, 700, 500 கிலோ மீட்டர் தூரம் என அதிக தூரம் வரை பறந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடம் பெற்று, வெற்றிபெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பந்தய புறா வளர்ப்போர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் பந்தய புறா வளர்ப்போர் சங்க டெல்டா கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
    • கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    குத்தாலம்:

    குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பிகாம்., வணிகவியல், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை 25-ந்தேதி நடைபெற இருப்பதால் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்2 தேர்ச்சி பெற்று இதுவரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

    கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளி–ட்டவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் வெ.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி2022-2023-க்கானமாணவ- மாணவிகள்சேர்க்கை தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர், சாமிய ப்பா கூட்டுறவு மேலா ண்மை நிலையம், மருத்து வக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 007

    இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்ச்சியும், 01.08.2022 அன்று 17 வயது பூர்த்தியடை ந்தவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்ெதாகை பெற்று த்தரப்படும். முன்னாள் இராணுவ த்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சி யை பெறலாம்.விபரங்களை பெறுவத ற்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் தொலைபேசி எண்: 04362- 238253, 237426 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்து ள்ளார்.

    • சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கநந்தல் சின்னசேலம் நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன.இந்த குறு வட்டங்களில் உள்ள இந்த குறு வட்டங்கள் மூலமாகவும் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி பொதுத் தேர்வு நடந்தது தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன இந்தநிலையில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உயர்கல்வி படிக்க தேவைப்படுவதால் 1000 கணக்கான மாணவ மாணவிகள் இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக தாசில்தாரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்களிடமும் சரியான பதில் இல்லை இதனால் விண்ணப்பித்தும் சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை கிடப்பில் போடாமல் தினசரி இ சேவை மையம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நிலுவையில் உள்ள சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க அரசு முதன்மை செயலாளர் உஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரி வித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் இது குறித்து பள்ளி கல்வி துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு உத்தர விட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    இந்த ஆய்வின்போது காகர்லா உஷா பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்களை எவ்வித நிலுவையுமின்றி வழங்கவும், மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களின் விபரங்கள் குறித்து அனைத்து வட்டாட்சியர்களிடமும் கேட்ட றிந்தார். நிலுவை க்கான காரணங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் பெறவும் வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

    அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் வட்டார அளவிலான பயிற்சி நடைபெறுகிறது. இதை யொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பயிற்சி மாணவர்க ளின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும் பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×