search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டு நிறுவன அமைப்பினருக்கு பாராட்டு சான்றிழ் - கலெக்டர் வழங்கினார்
    X

    நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார்.

    தொண்டு நிறுவன அமைப்பினருக்கு பாராட்டு சான்றிழ் - கலெக்டர் வழங்கினார்

    • ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.

    கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.

    வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×