search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Suffering"

    • அவனியாபுரம்-பெருங்குடி 4 வழிச் சாலை இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக அவனியாபுரம் விமான நிலைய சாலை மாறியிருக்கிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வி.வி.ஐ.பிக்கள், வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், வர்த்தக பிரதிநிதிகள் அனைவரும் அவனியாபுரம் விமான நிலைய சாலை வழியாகவே செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரமுகர்களும் இந்த சாலை வழியாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருவோர் அதிகரித்துள்ளனர். அதனால் இந்த சாலையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

    மேலும் தெற்கு வாசலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில் வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரை 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருக்கின்றன. பிரபலமான தியேட்டர், வணிக வளாகங்கள் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருப்பதினால் முகூர்த்த நாட்களில் நிகழ்ச்சிக்கு வரும் நபர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு பயணிகள் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் பெருங்குடியில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பெருங்குடியில் இருந்து அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    அவனியாபுரம் - பெருங்குடி 2.5 கி.மீ. தூர சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த சாலையின் நடுவே சில மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றி சாலையோரத்தில் அமைக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியை தமிழக மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களிடம் மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின் வாரியம் மதிப்பீட்டை இறுதி செய்து வழங்காமல் உள்ளது. அதனால் இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வேலைப்பளு காரணமாக மதிப்பீட்டை இறுதி செய்து அளிக்க முடியாமல் உள்ளதாக மின் வாரியத்தினர் கூறுகின்றனர். மின் வாரியத்திடமிருந்து மதிப்பீடு கிடைத்தவுடன் இந்த சாலைப் பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறை தயாராக உள்ளது.

    17.5 மீட்டர் அகலத்தில் நடுவே 2.5 மீ மீடியன் உடன் அமைக்கப்படும் இந்த சாலைப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் விமான நிலையம் செல்வோர் மட்டுமின்றி தூத்துக்குடி நான்கு வழிச் சாலைக்கு செல்லும் பயணிகளும், அந்த சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
    • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

    அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

    இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

    இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 70அரசு பள்ளிகள் உட்பட 119மேல்நிலைப்பள்ளிகள் இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

    ராமநாதபுரத்தில் அரசு இருபாலர் பள்ளியோ அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளியோ கிடையாது என்பதால் வேறு வழியின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி யிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை அரசால் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.

    ஒருவேளை இருபாலார் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி நகரில் அமையும் பட்சத்தில் தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    இந்த சூழலில் மருத்துவ கனவு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட தலைநகரில் வசித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரத்தை எடுத்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு அறிவித்துள்ள மருத்துவ உள் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

    6முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தும் உள் ஒதுக்கீடு பெற முடியவில்லையே? என்று பல பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் அரசு பள்ளி இல்லை என்பதற்கு காரணம் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு அறி வித்துள்ள மருத்துவ உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப் பிக்க வேண்டு மெனில் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் அரசுமேல்நிலைப்பள்ளியே இல்லாமல் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி கூறுகையில், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பள்ளி அமைப்பதற்கு உண்டான இடவசதி இல்லை எனக்கூறி வரு கின்றனர்.ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ளேயே தனியார் பள்ளி இயங்குவதற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், கூலித்தொழிலாளியான எனது மகள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார். என்னுடைய மகள் படிப்பதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத தால் 10-ம் வகுப்பு படித்து முடித்த அவரை எங்கு சேர்ப்பது? என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளேன் என்றார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .
    • உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்க ளாக பலத்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதேபோல திருநாவ லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கன மழை நீடித்து வரு கிறது. செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .

    அதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பச்சிளம் குழந்தை களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற காலம் கடத்தா மல் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அதி காரிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.

    • ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
    • மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்ட தீர்மானங்களை அலுவலர் சரவணன் வாசித்தார்.

    யூனியனுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும், பெரிய பட்டினம் ஊராட்சியில் தக்குவா நகர், ஜலாலியா நகரில் உள்ள அல்ஜலாலியா மழலையர் தொடக்கப்பள்ளி சாலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, படித்துறை தடுப்புச் சுவர், அங்கன்வாடி மராமத்து, உறை கிணறு நடைமேடை அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் சிவலி ங்கம்:- கீழக்கரையில் இருந்து மாயாகுளம் வழியாக ஏர்வாடி செல்லும் அரசு டவுன் பஸ் (எண்.10), பள்ளி, கல்லூரி நேரமான காலை, மாலைகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று திரும்பும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட வழித்த டத்தை தொடங்க அதிகா ரிகளை வலியுறுத்த வேண்டும்.

    நாகநாதன் (அ.தி.மு.க.) :- ரகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். அம்மா பூங்கா திறக்காமல் உள்ளதால் விளையாட்டு உபகரண பொருட்கள், தளவாடப் பொருட்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

    பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ.):- சுதந்திர தினம், அரசு சார்ந்த விழாக்களில் பள்ளிகளில் யூனியன் கவுன்சிலர்களை ஆசிரியர்கள் அழைப்ப தில்லை. பெரியபட்டினம் முரைவாய்க்கால் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமிஷனர் ராஜேந்திரன்:- பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் யூனியன் கவுன்சிலர்களை அழைக்க கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தப்படும்.

    புல்லாணி (தலைவர்):- கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவே ற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ. (கி.ஊராட்சி) கணேஷ் பாபு நன்றி கூறினார். துணை பி.டி.ஓ.க்கள், விஜயகுமார், மன்சூர், சத்தியகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கநந்தல் சின்னசேலம் நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன.இந்த குறு வட்டங்களில் உள்ள இந்த குறு வட்டங்கள் மூலமாகவும் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி பொதுத் தேர்வு நடந்தது தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன இந்தநிலையில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உயர்கல்வி படிக்க தேவைப்படுவதால் 1000 கணக்கான மாணவ மாணவிகள் இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக தாசில்தாரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்களிடமும் சரியான பதில் இல்லை இதனால் விண்ணப்பித்தும் சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை கிடப்பில் போடாமல் தினசரி இ சேவை மையம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×