search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் சைக்கிள் போட்டி
    X

    சைக்கிள் போட்டியை எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அண்ணா பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் சைக்கிள் போட்டி

    • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
    • கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறை வடைகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டு சாலை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்தநாளி னை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி லட்சுமணன் ஆகியோா இன்று (14.10.2023) கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி யும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்படி, அண்ணா பிறந்த நாளினை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று, விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு, மிதி வண்டி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி யானது, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலி யனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தி லும், 13 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலியனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம் வீரன் கோவிலி லும், 15 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி யானது, கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பக்கம், காகுப்பம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 15 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்திலும், 17 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலி யனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் வழி யாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்க ளுக்கு ரூ.5000-, 3,000-, 2,000-, எனவும் 4 முதல் 10 வரை இடங்களை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250- வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கோலி யனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சி தாநந்தம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் வேல்முரு கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×