search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை- இணைப்பதிவாளர் தகவல்
    X

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை- இணைப்பதிவாளர் தகவல்

    • அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி2022-2023-க்கானமாணவ- மாணவிகள்சேர்க்கை தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர், சாமிய ப்பா கூட்டுறவு மேலா ண்மை நிலையம், மருத்து வக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 007

    இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்ச்சியும், 01.08.2022 அன்று 17 வயது பூர்த்தியடை ந்தவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்ெதாகை பெற்று த்தரப்படும். முன்னாள் இராணுவ த்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சி யை பெறலாம்.விபரங்களை பெறுவத ற்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் தொலைபேசி எண்: 04362- 238253, 237426 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×