search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity connection"

    • அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள் . உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருளானந்தநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 9 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் மின் கோட்ட நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் செயற் பொறியாளர் (பொது) திருஞானசம்பந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.கிருஷ்ணாபுரம் வே.மந்தராசலம் கொடுத்த மனுவில், சாலைப்புதூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதியில் உள்ள வலசுபாளையம் நாச்சிமுத்து,வேலுசாமி ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு இலவச விவசாய மின்சார இணைப்பு ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று கடந்த 22ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை . அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.விரைவில் விவசாய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
    • வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதில் உள்ள குளறு படியை களைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குறு, சிறு பனியன் தொழில்கள், வணிக ரீதியான, கடைகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக கட்டடத்தில் குறு, சிறு தொழிற்சாலைகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றன.

    மின்வரிய அலுவலர்கள், மனுக்கள் கிடப்பில் இருப்பதால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாமென தடுக்கின்றனர். மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் குறு, சிறு தொழில்கள் துவங்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் 2,500க்கும் அதிகமான புதிய வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்காலிக மின் இணைப்பில் தொழில் நடத்தி வருவதால் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    கட்டிட உரிமையாளர்கள், மின் கட்டண செலவை சமாளிக்க முடியாமல் வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வணிக ரீதியாக கட்டியுள்ள கட்டடங்களில் இயங்கி வரும் குறு, சிறு பனியன் தொழிற்சாலைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் இணைப்பு வழங்கி வருகிறோம். பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.

    • சுமார்7 லட்சம் பேர் இன்னும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கவில்லை.
    • இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

    நேற்று மாலை வரை 2.59 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார்7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இந்தநிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.80 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டி இருப்பதால் இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது. தொழில்நுட்பம் கோளாறு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கின்றனர் என்றார்.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.
    • ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

    பின்னர் துறை சார்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

    ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

    அதனால் மேலும் அவகாசம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகரிகள் கூறியதாவது:-

    ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலர் இணைக்காமல் இருப்பதால் மேலும் சில நாட்கள் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் 30-ந் தேதி வெளியிடுகிறார். மின் இணைப்புடன் ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று யாரும் கூறவில்லை. மின் கட்டணம் செலுத்தும்போது அவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவு செய்யப்படும்.

    எனவே இணைக்காத மின் நுகர்வோர்கள் விரைவில் இணைத்து மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
    • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

    மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலம் 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இது தவிர மின்வாரிய அலுவலகங்கள் மூலம், இணைத்தவர்களையும் சேர்த்து நேற்றுவரை மொத்தம் 2.9 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளதாக மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31-ந் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் உடனடியாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்,

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், அதிகரம், பில்லத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் ரூ. 18.47 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    மின் இணைப்புகள்

    முதல்-அமைச்சர் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி டும் பொருட்டு, பொது மக்களின் தேவை களை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    நாட்டின் முதுகெழும் பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென 2021- 2022-ம் நிதி யாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவ சாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதுன்ரெட்டி, மின் உதவி செயற்பொறியாளர் கென்னடி, செல்லத்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, உதவி பொறியாளர் அப்துல் காதர்,சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், வாணியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீனா மாதவன், மற்றும் திருப்பத்தூர், கல்லல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர்

    நெல்லை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    சிறப்பு முகாம்கள்

    கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எளிதாக ஆதார் எண்ணை இணைப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகிறார்கள்.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் வருகிற 31-ந் தேதி வரை நடத்தபட உள்ளது.

    81 சதவீதம் பேர்

    பொங்கல் பண்டி கையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்க ளாக சிறப்பு முகாம்கள் நடத்தப் படவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சிறப்பு முகாம் தொடங்கியது.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் நுகர்வோர்கள் உள்ளனர். இன்று காலைவரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர். இது 81.21 சதவீதமாகும். 

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
    • சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார். இது தொடர்பாக கூனிமேடு கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், போலியாக ரப்பர் ஸ்டாம்ப் சீல் செய்து, சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகீம் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கூனிமேடு, செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக புதுச்சேரியில் தலைமறைவாகியுள்ள 2 பேரையும் போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதி பர பரப்பாக காணப்படுகிறது. 

    • ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
    • 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.

    கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.

    ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.

    இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியனது 31. 12. 2022 வரை தொடர்ந்து நடைபெறும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்தின் சார்பாக பிரசார வாகன பேரணி தொடக்க விழா நடைபெற்றது.

    பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வள்ளியூர் கோட்டம் வளன்னரசு, வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனமானது வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    வீட்டு மின் இணைப்பு, விவசாயம், குடிசை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில் செய்வோர், மின்வாரியத்தின் மானியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்ந்த மின் இணைப்புகள்போக, 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க திருப்பூர் கோட்ட மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    அதன்படி மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு 'கவுன்டர்கள்' திறக்கப்பட்டு பண்டிகை நாள் விடுமுறை தவிர்த்து, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூர் கோட்ட மின்வாரிய கண்காணப்பு பொறியாளர் ராஜகுமாரி (கூடுதல் பொறுப்பு) கூறுகையில், திருப்பூர் கோட்டத்தில் 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய சூழலில் இதுவரை 40 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே இணைத்துக் கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மின்வாரிய அலுவலகம்சென்று இணைத்து கொள்கின்றனர். மக்களிடம் எவ்வித தயக்கமும் இல்லை என்றார்.

    சிறப்பு கவுன்டர்களில்ஆதார் இணைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கூறுகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசின் எந்தவொரு சலுகையும் ரத்தாகாது என மின்துறை அமைச்சர் தெளிவுப் படுத்தியதை தொடர்ந்து அச்சம், தயக்கமின்றி இணைப்பு பணி மேற்கொள்கின்றனர் என்றனர்.

    ×