search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake certificate"

    • வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது.
    • வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

    அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

    • ஆசிரியையின் கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது.
    • போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடை நிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாசில்தார் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு
    • நீதிபதி உத்தரவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள பெரிய குடும்ப தெரு பகுதியை சேர்ந்தவர் பவானி சங்கர் இவரது மனைவி கமலா 57 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

    இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பவானி சங்கர் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்வருடன் தொடர்பு வைத்தார்.

    அவர்களுக்கு பாலாஜி பேபி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார்.

    பவானிசங்கருக்கு இந்திராணி மற்றும் அவருடைய மகன் பாலாஜி இருவர் மட்டுமே வாரிசு என்று வருவாய் துறையிடம் பொய்யான வாரிசு சான்றிதழ் தயார் செய்து கமலாவின் கணவர் பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை இந்திராணி மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயருக்கு வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பட்டா ,சிட்டா ஆகியவற்றை பெற்று கொண்டனர்.

    இதற்கு ஆலங்காயம் புலவர்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்கி,விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்து போட்டுள்ளனர்.

    இது குறித்து பத்திரபதிவு தடை செய்ய வேண்டும் என்று கமலா தடை மனுவை சார்பதிவாளர் அலுவல கத்தில் அளித்துள்ளார். இதை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திர பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, இந்திராணியின் மகன் பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி,துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன்,பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர்.
    • பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், தொகுதி தலைவர் சுந்தரவடிவேல், சந்துரு, அன்பரசன் ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -

    அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

    குறுகிய கால ஒப்பந்தம் ஒப்பந்த பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் பேராசிரியர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும்.

    பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். குறுகிய கால பேராசிரியர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தனர்.

    • பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.
    • முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அரசு அலுவலரின் பெயரில் போலிச் சான்று வழங்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாா் கடிதத்தில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் போடிப்பட்டி கிராமம் காமராஜா் நகரில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா் அரசு வேலையில் இருப்பதாக கூறி உடுமலையைச் சோ்ந்த தமிழ்செல்வன், ஜெயந்தி, இமானு பிரதீப், சுகுமனோன், பொள்ளாச்சியை சோ்ந்த கோகுல் ஆகிய 5 பேரிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என வசூல் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.மேலும் அரசு அலுவலரின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா். ஆகவே, அவா் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் வழங்க வேண்டிய சான்றிதழை சகாயசுந்தரி போலியாக தயாரித்து அதனை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆசிரியை சகாயசுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சிங்கராயர் மனைவி சகாயசுந்தரி (வயது 49). இவர் தற்போது மண்ணச்சநல்லூரை அடுத்த மூவராயன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். முன்னதாக கடந்த 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

    இந்தநிலையில் ஆசிரியர்களின் உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு பணிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆசிரியை சகாயசுந்தரி பணியில் சேரும் போது வழங்கிய சான்றிதழ் போலியானது என்பது தெரிந்தது. தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் வழங்க வேண்டிய சான்றிதழை சகாயசுந்தரி போலியாக தயாரித்து அதனை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் ஏமாற்றி பணியில் சேர்ந்தது உறுதியானது. இதுதொடர்பாக முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆசிரியை சகாயசுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை சகாயசுந்தரி பணியில் சேர்ந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அவர் போலி சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    • சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
    • ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    திருப்பதி:

    வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிவதற்கு முன்பு இது போன்று ஏராளமானோர் போலி சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆந்திராவில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை சீனா, ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் இந்தியாவில் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

    இருப்பினும் அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆந்திரா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி சான்றிதழ் பதிவு செய்வதற்கு மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது எப்.எம்.ஜி. தேர்வுக்கான போலி சான்றிதழ்கள் மற்றும் 15 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

    மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    இதேபோல் பீகார் மருத்துவ கவுன்சிலிலும் போலி சான்றிதழ் கொடுத்து பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 7 டாக்டர்களை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது குற்றம், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் போலி சான்றிதழ் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
    • சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார். இது தொடர்பாக கூனிமேடு கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், போலியாக ரப்பர் ஸ்டாம்ப் சீல் செய்து, சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகீம் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கூனிமேடு, செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக புதுச்சேரியில் தலைமறைவாகியுள்ள 2 பேரையும் போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதி பர பரப்பாக காணப்படுகிறது. 

    • அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருபுவனை தொகுதியில் முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தில் குடியிருப்பு மற்றும் வருமான சான்றிதழ்கள் அரசு முத்திரையை பயன்படுத்தி பயனாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கலிதீர்த்தாள்குப்பம் மேயர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் போலியாக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் அளிக்கும் சான்றிதழ்களை வழங்குவதாக ஏற்கனவே தொகுதி எம்.எல்.ஏ.வான அங்காளன் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலி பி.எச்.டி. பட்டம் கொடுத்து பணியில் சேர்ந்த 11 கல்லூரி பேராசிரியர்களை கல்லூரி கல்வி இயக்குனர் சஸ்பெண்டு செய்துள்ளார்.
    சென்னை:

    கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் அரசு கலைக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பி.எச்.டி. முடித்து இருக்க வேண்டும்.

    செட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதி உடையவராக இருந்தால் மட்டுமே பணியாற்ற முடியும். எம்.பில். மட்டும் படித்து இருந்தால் தகுதியாக ஏற்பது இல்லை. பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற முடியும்.

    இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எச்.டி. போலி சான்றிதழ் கொடுத்து 11 பேராசிரியர்கள் பணியாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கல்லூரி கல்வி இயக்குனர் சஸ்பெண்டு செய்துள்ளார். இந்த சம்பவம் உயர் கல்வி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேகாலயா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பி.எச்.டி. பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையில் அது போன்ற பல்கலைக்கழகங்களே இல்லை என்பதும், பல்கலைக்கழகமே செயல்படாத நிலையில் போலி சான்றிதழ் தயாரித்து 11 பேராசிரியர்கள் பணியாற்றி வந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரயியல் துறையை சேர்ந்த உதவி பேராசிரியர்கள் 2 பேர் போலியான பி.எச்.டி. சான்றிதழ் கொடுத்து இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள வீர்ரன்வீர் பல்கலைக்கழக சான்றிதழும், மற்றொருவர் மேகாலயா பல்கலைக்கழக பெயரில் சான்றிதழும் கொடுத்து இருந்தனர்.

    இந்த 2 பெயரிலும் பல்கலைக்கழகங்களே இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலி பி.எச்.டி. சான்றிதழ் கொடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியில் சேர்ந்து இருக்கலாம் என கல்லூரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மீது கல்லூரி கல்வி இயக்ககம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சஸ்பெண்டு செய்யப்பட்ட பேராசிரியர்கள் அரசி டம் இருந்து பாதி சம்பளம் பெறுவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    போலி சான்றிதழ் பிரச்சினையில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மீது கடுமையான தண்டனை இல்லை. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் கழக தலைவர் என். பசுபதி தெரிவித்துள்ளார். பெரும்பாலான போலி பி.எச்.டி. சான்றிதழ்கள் வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக பெயரில் வந்துள்ளது.

    பணியில் சேர்க்கும் போதோ அதன் பின்னரோ சான்றிதழ்களை ஆய்வு செய்து இருந்தால் இந்த தவறுகளை கண்டுபிடித்து இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
    ஊட்டி அரசு கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது.

    புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி சான்றிதழ் சமர்ப்பித்த நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 241 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு ஊட்டி அரசு கல்லூரியில் 3 பேர் வடமாநில பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் 2 பேர் சிக்கி உள்ளனர். #OotyGovtArtsCollege
    ×