என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே போலி சான்றிதழ் தயாரித்து அரசு இடத்தில் மின் இணைப்பு: 3 பேர் கைது
- அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
- சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் வீடு கட்டி மின் இணைப்பு பெற்றுள்ளார். இது தொடர்பாக கூனிமேடு கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், போலியாக ரப்பர் ஸ்டாம்ப் சீல் செய்து, சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்துல்ரகீம் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கூனிமேடு, செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக புதுச்சேரியில் தலைமறைவாகியுள்ள 2 பேரையும் போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதி பர பரப்பாக காணப்படுகிறது.
Next Story






