search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு
    X

    போலி வாரிசு சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு

    • தாசில்தார் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு
    • நீதிபதி உத்தரவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள பெரிய குடும்ப தெரு பகுதியை சேர்ந்தவர் பவானி சங்கர் இவரது மனைவி கமலா 57 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

    இவர்களுக்கு குழந்தை இல்லாததால் பவானி சங்கர் முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்வருடன் தொடர்பு வைத்தார்.

    அவர்களுக்கு பாலாஜி பேபி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார்.

    பவானிசங்கருக்கு இந்திராணி மற்றும் அவருடைய மகன் பாலாஜி இருவர் மட்டுமே வாரிசு என்று வருவாய் துறையிடம் பொய்யான வாரிசு சான்றிதழ் தயார் செய்து கமலாவின் கணவர் பவானி சங்கர் பேரில் இருந்த 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை இந்திராணி மற்றும் பாலாஜி ஆகியோரின் பெயருக்கு வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து பட்டா ,சிட்டா ஆகியவற்றை பெற்று கொண்டனர்.

    இதற்கு ஆலங்காயம் புலவர்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்கி,விஜிலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்து போட்டுள்ளனர்.

    இது குறித்து பத்திரபதிவு தடை செய்ய வேண்டும் என்று கமலா தடை மனுவை சார்பதிவாளர் அலுவல கத்தில் அளித்துள்ளார். இதை சார்பதிவாளர் கார்த்திகேயன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பொய்யான வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திர பதிவு செய்த மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கில் விசாரணை நடத்திய குற்றவியல் நீதித்துறை நடுவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த இந்திராணி, இந்திராணியின் மகன் பாலாஜி, வாரிசு சான்றிதழ் வழங்கும் போது பணியில் இருந்த தாசில்தார் கீதாராணி,துணை தாசில்தார் ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன்,பொய்யான வாரிசு சான்றிதழ் பெற உதவியாக இருந்த மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட நபர்கள் என 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×