search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள்
    X

    அதிகரம் கிராமத்தில் புதிய மின்மாற்றி செயல்பாட்டினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள்

    • தி.மு.க. ஆட்சியில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்,

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், அதிகரம், பில்லத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் ரூ. 18.47 லட்சம் மதிப்பில் 63 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    மின் இணைப்புகள்

    முதல்-அமைச்சர் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி டும் பொருட்டு, பொது மக்களின் தேவை களை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    நாட்டின் முதுகெழும் பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கென 2021- 2022-ம் நிதி யாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புகளும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவ சாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொண்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதுன்ரெட்டி, மின் உதவி செயற்பொறியாளர் கென்னடி, செல்லத்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, உதவி பொறியாளர் அப்துல் காதர்,சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், வாணியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீனா மாதவன், மற்றும் திருப்பத்தூர், கல்லல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×